Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஐபிஎல் தொடரில் 670 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றிய கேஎல் ராகுல்

ஐபிஎல் தொடரில் 670 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றிய கேஎல் ராகுல்

By: Karunakaran Wed, 11 Nov 2020 10:49:19 AM

ஐபிஎல் தொடரில் 670 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றிய கேஎல் ராகுல்

ஐபிஎல் 13-வது சீசன் கடந்த செப்டம்பர் மாதம் அமீரகத்தில் தொடங்கியது. கொரோனா கட்டுப்பாடுகளுடன் ரசிகர்கள் இன்றி இந்த போட்டி நடைபெற்றது. இந்நிலையில் ஐபிஎல் 13-வது சீசன் தொடர்ந்து நடைபெற்ற 60 ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்தன. இந்த லீக் ஆட்டங்களில் அதிக ரன்கள் குவிக்கும் பேட்ஸ்மேனுக்கு ஆரஞ்சு தொப்பியும், அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்தும் பந்து வீச்சாளருக்கு பர்பிள் தொப்பியும் வழங்கப்படும்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாவிட்டாலும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் 14 போட்டிகளில் ஒரு சதம், 5 அரைசதங்களுடன் 670 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றியுள்ளார். 17 போட்டிகளில் 30 விக்கெட்டுக்கள் வீழ்த்திய ரபாடா பர்பிள் தொப்பியை கைப்பற்றியுள்ளார்.

kl rahul,orange cap,670 runs,ipl series ,கே.எல்.ராகுல், ஆரஞ்சு தொப்பி, 670 ரன்கள், ஐ.பி.எல் தொடர்

மேலும் விருது பெற்றவர்கள்: வளர்ந்து வரும் வீரர் விருதை ( எமர்ஜிங் பிளேயர்) - தேவ்தத் படிக்கல் (ஆர்சிபி) பெற்றுள்ளனர்.
ஃபேர் பிளே விருதை ரோகித் சர்மா (மும்பை) பெற்றுள்ளார்.
கேம் சேஞ்சர் விருதினை கேஎல் ராகுல் (பஞ்சாப்) பெற்றுள்ளார்.
மேலும் சூப்பர் ஸ்டிரைக்கர் விருதை பொல்லார்டு (மும்பை) பெற்றுள்ளார்.

அதிக சிக்சர் அடித்த வீரருக்கான விருதினை இஷான் கிஷண் - (மும்பை- 30 சிக்சர்) பெற்றுள்ளார்.
பவர் பிளேயர் விருதை டிரெண்ட் போல்ட் (மும்பை) பெற்றுள்ளார்.
மதிப்பு மிகுந்த வீரர் - ஜோப்ரா ஆர்ச்சர் (ராஜஸ்தான்) பெற்றுள்ளார்.

Tags :