- வீடு›
- விளையாட்டு›
- கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் பதவியிலிருந்து ராஜினாமா
கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் பதவியிலிருந்து ராஜினாமா
By: Karunakaran Fri, 16 Oct 2020 6:46:09 PM
13-வது ஐபிஎல் போட்டி அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 8 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. அதில் கொல்கத்தா அணியும் ஒன்று. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் இருந்தார். இந்நிலையில் அவர் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கொல்கத்தா அணியில் இங்கிலாந்து அணியின் மோர்கன் விளையாடி வருகிறார். இங்கிலாந்துக்கு உலக கோப்பையை வாங்கிக் கொடுத்த அவருக்கு அனுபவம் அதிகமாக இருப்பதால் அவரை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.
தற்போது, தினேஷ் கார்த்திக் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். அவருக்குப் பதிலாக மோர்கன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இந்த சீசனில் கொல்கத்தா இதுவரை ஏழு போட்டிகளில் விளையாடி நான்கில் வெற்றி பெற்றுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி வலுவான அணி என்பதால் அதனை சமாளிக்க கொல்கத்தா அணியில் வலுவான திட்டமிடல் அவசியம். தற்போது மோர்கன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதால், கொல்கத்தா அணி திறமையாக செயல்ப்படும்.