- வீடு›
- விளையாட்டு›
- ஏழாவது முறையாக தங்க ஷுவை கைப்பற்றி அசத்தியுள்ளார் லயோனல் மெஸ்சி
ஏழாவது முறையாக தங்க ஷுவை கைப்பற்றி அசத்தியுள்ளார் லயோனல் மெஸ்சி
By: Nagaraj Tue, 21 July 2020 3:39:21 PM
லா லிகா போட்டியில் 7-வது முறையாக அதிக கோல் அடித்தவருக்கான தங்க ஷூவை கைப்பற்றியுள்ளார் பார்சிலோனா அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி.
ஸ்பெயினில நடைபெற்ற புகழ்பெற்ற லா லிகா கால்பந்து போட்டித் தொடரில் 20 அணிகள் பங்கேற்று விளையாடியது. இந்த தொடரில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் சாம்பியன் பட்டம் வென்ற ரியல் மாட்ரிட், லெகானெஸ் அணி இடையேயான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
முன்னதாக இந்த தொடரில் 38 ஆட்டங்களில் விளையாடி 26 வெற்றி, 9 டிரா, 3
தோல்வியுடன் 87 புள்ளிகள் குவித்து முதலிடத்தை பெற்ற ரியல் மாட்ரிட் அணி
34-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
கடந்த முறை
சாம்பியனான பார்சிலோனா அணி (38 ஆட்டங்களில் ஆடி 25 வெற்றி, 7 டிரா, 6
தோல்வி) 82 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்தது. இந்த போட்டி தொடரில்
பார்சிலோனா அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி (அர்ஜென்டினா) 25 கோல்கள்
அடித்து அசத்தி 'தங்க ஷூவை' தனதாக்கினார்.
இதன் மூலம் லா லிகா போட்டியில் 7-வது முறையாக அதிக கோல் அடித்தவருக்கான தங்க ஷூவை கைப்பற்றியுள்ளார்.