Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • மழை கொடுத்த அதிர்ஷ்டம்.. இரண்டாவது வெற்றி பெற்றது இந்திய அணி

மழை கொடுத்த அதிர்ஷ்டம்.. இரண்டாவது வெற்றி பெற்றது இந்திய அணி

By: Nagaraj Mon, 03 Oct 2022 9:15:26 PM

மழை கொடுத்த அதிர்ஷ்டம்.. இரண்டாவது வெற்றி பெற்றது இந்திய அணி

சில்ஹெட்: மழை தொடர்ந்து பெய்து வந்ததால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.


பெண்களுக்கான ஆசிய கோப்பை தொடர் வங்கதேசத்தில் நடந்து வருகிறது. இந்த தொடர் டி20 முறையில் நடைபெறுகிறது. மொத்தம் 7 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்த தொடரின் முதல் சுற்று ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறுகிறது. இந்த தொடரில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் இந்திய அணி விளையாடி வருகிறது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மலேசிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. மேகனா 69 ரன்கள் எடுத்தார்.

indian-team,malaysian team,rain,united arab emirates ,இந்திய அணி, சில்ஹெட், மலேசிய அணி, மழை

ஷெபாலி 46 ரன்களும், ரிச்சா கோஷ் 33 ரன்களும் எடுத்தனர். 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மலேசிய அணி தொடர்ச்சியாக இரண்டு விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது. மேலும் 5.2 ஓவர்கள் முடிவில் அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 16 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை பெய்தது.

இதனால் சிறிது நேரம் போட்டி நிறுத்தப்பட்டது. இருப்பினும் மழை தொடர்ந்து பெய்து வந்ததால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்திய அணி இரண்டு போட்டிகளில் இரண்டு வெற்றிகளை பதிவு செய்துள்ளது. நாளை இந்திய அணி ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொள்கிறது.

Tags :
|