- வீடு›
- விளையாட்டு›
- சென்னை அணியில் விரைவில் பல மாற்றங்கள் செய்யப்படும்
சென்னை அணியில் விரைவில் பல மாற்றங்கள் செய்யப்படும்
By: Nagaraj Sun, 27 Sept 2020 4:43:29 PM
விரைவில் அணியில் பல மாற்றங்கள் செய்யப்படும் என்று சென்னை அணியின் பயிற்சியாளர் ப்ளமிங் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் தற்பொழுது ஐக்கிய அரபு அமிரகத்தில் பிரமாண்டமாக நடைபெற்று வருகின்றது. அனைத்து ஐபிஎல் போட்டிகளும் துபாய், ஷார்ஷா, அபுதாபி ஆகிய மூன்று மைதானங்களில் நடைபெற்று வருகின்றன.
ஐபிஎல் தொடர் தொடங்கி முதல் வார போட்டிகள் நடைபெற்று முடிவடைந்துள்ளது. முதல் வார போட்டிகளின் முடிவில் அனைத்து அணிகளும் தலா இரண்டு போட்டிகள் விளையாடி உள்ளனர். கொரோனா தொற்றிற்கு இடையில் நடைபெறும் ஐபிஎல் தொடர் என்பதால் மிகவும் கட்டுபாடுகளுடன் போட்டி தொடர்கள் நடைபெறுகின்றன.
இந்நிலையில் முதல் வார ஐபிஎல் தொடர்களின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ்
அணி மூன்று போட்டிகள் விளையாடி உள்ளது. அதில் முதல் போட்டியை தவிர்த்து
மற்ற இரண்டு போட்டிகளிலும் தோல்வியை அடைந்துள்ளது. இது சென்னை அணிக்கு
பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிகின்றது.
ராஜஸ்தான் அணிக்கு
எதிரான போட்டியில் சுழல் பந்து வீச்சு மற்றும் லுங்கி இங்கிடியின் கடைசி
ஓவரின் காரணமாக சென்னை தோல்வியை தழுவிய நிலையில் டெல்லி அணிக்கு எதிரான
போட்டியில் சென்னை அணியின் பேட்டிங் சரியில்லாமல் தோல்வியை தழுவியது.
சென்னை அணியில் பாப் டுப் ப்ளஸிஸ் தவிர மற்ற வீரர்கள் சரியான பார்ம் இல்லை
என்பது தெரிகிறது.
இந்நிலையில் சென்னை அணியின் பயிற்சியாளர் ப்ளமிங் மற்றும் டெல்லி அணியின் தோல்விக்கு பிறகு தோனியும் கூறியதாவது;
சென்னை
அணியில் தொடக்க வீரர்களின் ஆட்டம் சரியாக இல்லை என்றும் விரைவில் அணியில்
பல மாற்றங்கள் செய்யப்படும் என்றும் கூறினர். சென்னை அணியின் தொடர்
தோல்விக்கு ரெய்னா, ராய்டு போன்ற வீரர்கள் இல்லாதது தான் காரணம் என
கூறியுள்ளனர்.