- வீடு›
- விளையாட்டு›
- பொங்கல் பண்டிகையையொட்டி மாரத்தான் போட்டி
பொங்கல் பண்டிகையையொட்டி மாரத்தான் போட்டி
By: Nagaraj Sun, 15 Jan 2023 8:26:11 PM
பழனி: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது வாகரை. இங்கு தைப் பொங்கல் பண்டிகையையொட்டி மாரத்தான் போட்டி நடைபெற்றது. மாரத்தான் போட்டியில் கோவை, ஈரோடு, தேனி, மதுரை, பொள்ளாச்சி, ஊட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
ஆண்களுக்கு பத்து கிலோமீட்டர் தூரமும், பெண்களுக்கு ஐந்து கிலோமீட்டர் தூரமும் நிர்ணயிக்கப்பட்டது. கீரனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி ராசு ஆகியோர் கொடி அசைத்து மாரத்தான் ஓட்டத்தை துவக்கி வைத்தனர்.
மாரத்தான் போட்டியில் பெண்கள் பிரிவில் பொள்ளாச்சியை சேர்ந்த திவ்யா முதல் பரிசும், மண்பாறையை சேர்ந்த யாழினி 2ம் பரிசும், பொள்ளாச்சியை சேர்ந்த சங்கமித்ரா மூன்றாம் பரிசும் பெற்றனர்.
ஆண்கள் பிரிவில் கோவையை சேர்ந்த ஜெபகுமார் முதல் பரிசும், ஊட்டியை சேர்ந்த ரங்கராஜ் 2ம் பரிசும், அரியலூரை சேர்ந்த ரித்தீஷ் மூன்றாம் பரிசும் பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.