- வீடு›
- விளையாட்டு›
- தமிழக வீரர் நடராஜனை புகழ்ந்து தள்ளிய ஆஸ்திரேலியா வீரர் மெக்ராத்
தமிழக வீரர் நடராஜனை புகழ்ந்து தள்ளிய ஆஸ்திரேலியா வீரர் மெக்ராத்
By: Nagaraj Wed, 09 Dec 2020 7:46:28 PM
வேற லெவல்... நல்ல எதிர்காலம் இருக்கு என்று தமிழக வீரர் நடராஜனை புகழ்ந்து தள்ளியுள்ளார் ஆஸ்திரேலியா வீரர் மெக்ராத்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் மோசமான தோல்வியை சந்தித்த இந்திய அணி, மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்றதோடு அல்லாமல், அடுத்ததாக நடைபெற்ற டி.20 தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் அசத்தல் வெற்றி பெற்று டி.20 தொடரையும் கைப்பற்றியது.
தோல்வியில் துவங்கிய இந்திய அணியின் அடுத்தடுத்த வெற்றிகளுக்கு தமிழக வீரரான நடராஜனும், ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும் தான் மிக முக்கிய காரணமாக திகழ்ந்தனர். இந்திய அணியின் ஒவ்வொரு வெற்றியிலும் மிக முக்கிய பங்காற்றிய நடராஜன் மற்றும் ஹர்திக் பாண்டியாவிற்கு அதிகமான பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இதில் ஹர்திக் பாண்டியா அனுபவ வீரர் என்பதால் அவரை விட இளம் வீரரான நடராஜனை
முன்னாள் வீரர்கள் பலர் வெகுவாக பாராட்டி பேசி வருகின்றனர். தொடர் நாயகன்
விருது வென்ற ஹர்திக் பாண்டியாவும் தன்னை விட நடராஜன் தான் தொடர் நாயகன்
விருதுக்கு தகுதியானவர் என பெருந்தன்மையுடன் தெரிவித்திருந்தார்.
குறிப்பாக
தான் விளையாடிய 4 போட்டிகளில் 9 விக்கெட்டுகள் வீழ்த்தி கிட்டத்தட்ட தொடர்
நாயகன் விருது அருகில் வந்து விட்டார் நடராஜன். அவனை தற்போது இந்திய
கிரிக்கெட் உலகம் தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. அந்த
அளவிற்கு அவரது வெற்றி மிகவும் முக்கியமானது.
மேலும் சமூக
பின்னணியிலும் பொருளாதார பின்னணியிலும் மிகவும் கடைசி நிலையில் இருந்து
வந்த ஒரு வீரர் நடராஜன். இதன் காரணமாகவே அவரை குறிப்பாக தமிழகம் தூக்கி
வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் பந்து வீச்சாளர் மெக்ராத் நடராஜனின் பந்துவீச்சை பற்றி வாய் நிறைய புகழ்ந்து பேசியிருக்கிறார். அவர்
கூறுகையில் 'நடராஜன் வீசிய பந்தெல்லாம் என்னை ஈர்த்துவிட்டது. அவர் மிகத்
திறமையான வீரர் இந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் மூலம் மேலும் ஒரு
திறமையான பந்து வீச்சாளர் இந்திய அணிக்கு கிடைத்துவிட்டார்.
கடின
உழைப்பும் நம்பிக்கையும் இருந்தால் எப்போது முன்னேறி விடலாம் என்பதற்கு
நடராஜன் சான்று. இனி அவர் மிகப்பெரிய அளவில் வளர்ந்து வரப்போகிறார் என்பதை
என்னால் பார்க்க முடிகிறது' என்று தெரிவித்திருக்கிறார் கிளன் மெக்ராத்.