- வீடு›
- விளையாட்டு›
- இலங்கை கிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் ஓட்டிச் சென்ற கார் மோதி 74 வயது முதியவர் பலி
இலங்கை கிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் ஓட்டிச் சென்ற கார் மோதி 74 வயது முதியவர் பலி
By: Karunakaran Sun, 05 July 2020 4:46:53 PM
கொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் பல நடைபெறவில்லை. மேலும் சில போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. ரசிகர்கள் இன்றி போட்டி நடத்த ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அந்தந்த நாட்டு வீரர்கள் தங்களது சொந்த நாட்டில் வீடுகளிலே முடங்கியுள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக குசால் மெண்டிஸ் உள்ளார். இவருக்கு 25 வயதாகிறது. இவர் இலங்கை அணிக்காக 44 டெஸ்ட் மற்றும் 76 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இன்று அதிகாலை கொழும்பு புறநகர் பகுதியில் குசால் மெண்டிஸ் காரை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் ஒட்டி சென்ற கார் 74 வயதான முதியவர் மீது மோதியுள்ளது. இதனால் அந்த முதியவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது முதியவர் உயிரிழந்த காரணத்திற்காக குசால் மெண்டிஸை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட குசால் மெண்டிஸ் நீதிபதி முன் ஆஜர்படுத்தவுள்ளார். கிரிக்கெட் வீரரின் இந்த செயல் பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.