Advertisement

அணிக்கு திரும்பிய பின்னர் மெஸ்சி சிறப்பாக விளையாடுகிறார்

By: Nagaraj Tue, 29 Sept 2020 09:14:06 AM

அணிக்கு திரும்பிய பின்னர் மெஸ்சி சிறப்பாக விளையாடுகிறார்

மெஸ்சி அணிக்கு திரும்பிய பின்னர் வழக்கம்போல் சிறப்பான அளவில் விளையாடி வருகிறார். மைதானத்தில் அவருடைய வழக்கமான ஆட்டத்தைப் பார்க்கலாம் என்று பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வரும் அர்ஜென்டினா கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி அந்த அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அணியில் இருந்து விலகுவதாக அறிவித்து வந்தார்.

அதாவது லயோனல் மெஸ்சியின் ஒப்பந்த காலமானது 2021 ஆம் ஆண்டு வரை நீடிக்கும் நிலையில், தன்னை அணியில் இருந்து விடுவிக்குமாறு மெஸ்சி கடிதம் எழுதிய நிலையில் ரூ.6 ஆயிரம் கோடி கட்டணமாக செலுத்த வேண்டும் என்று அணி நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது.

messi,team,playing,ground,game,coach ,மெஸ்சி, அணி, விளையாடி, மைதானம், ஆட்டம், பயிற்சியாளர்

இதனால் மெஸ்சி 2020-21 ம் ஆண்டுக்காக பார்சிலோனா கிளப் அணியில் விளையாட உள்ளதாக அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மெஸ்சியுடன் இணைந்து விளையாடிய லூயிஸ் சுவாரஸை பார்சிலோனா வெளியேற்ற, இது மெஸ்சிக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து கோமென் கூறியதாவது, ‘‘மெஸ்சியின் நண்பர் சுவாரஸ் அணியில் இருந்து வெளியேறியது நிச்சயம் அவருக்கு பெரிய அளவில் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கும். அவர்கள் ஏறக்குறைய 6 வருடங்களுக்கு மேல் ஒன்றாக விளையாடியுள்ளனர்.

மெஸ்சி சோகமாக இருந்தாலும், அணிக்கு திரும்பிய பின்னர் வழக்கம்போல் சிறப்பான அளவில் விளையாடி வருகிறார். மைதானத்தில் அவருடைய வழக்கமான ஆட்டத்தைப் பார்க்கலாம்’’ என்றார்.

Tags :
|
|
|
|