Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஐபிஎல் தொடரின் இன்று இறுதிப் போட்டியின் மூலம் புதிய சாதனை படைக்கவுள்ளார் எம்.எஸ்.தோனி

ஐபிஎல் தொடரின் இன்று இறுதிப் போட்டியின் மூலம் புதிய சாதனை படைக்கவுள்ளார் எம்.எஸ்.தோனி

By: vaithegi Sun, 28 May 2023 10:41:13 AM

ஐபிஎல் தொடரின் இன்று இறுதிப் போட்டியின் மூலம் புதிய சாதனை படைக்கவுள்ளார் எம்.எஸ்.தோனி


கடந்த சில மாதங்களாகவே விறுவிறுப்பாக நடைபெற்று வந்த, நடப்பாண்டு 16-ஆவது சீசன் ஐபிஎல் தொடர் போட்டிகள் தற்போது இறுதி கட்டத்திற்கு வந்த நிலையில், இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இடையே இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது. அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று மாலை 7.30 மணியளவில் இந்த போட்டி தொடங்குகிறது.

சென்னை அணி இதுவரை 10 முறை இறுதி போட்டிக்கு முன்னேறி ஒரு சாதனையை படைத்துள்ளது. மறுபக்கம், விளையாடிய 2 சீசனில் ஒரு பட்டத்தையும் வென்று, தற்போது இறுதி போட்டிக்கு முன்னேறி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது குஜராத் அணி.இன்று இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி சாம்பியன் பட்டம் பெரும் என்பதால் 2 அணிகளும் தீவிரமாக மோதும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

ms dhoni,ipl ,எம்.எஸ்.தோனி,ஐபிஎல்


இச்சமயத்தில் ஐபிஎல் தொடரின் இன்று இறுதிப் போட்டியின் மூலம் புதிய சாதனை படைக்கவுள்ளார் சென்னை அணி கேப்டன் எம்.எஸ்.தோனி. அதாவது, குஜராத்துக்கு எதிராக நாளை நடைபெற உள்ள இறுதி போட்டியின் மூலம், ஐபிஎல் வரலாற்றில் 250 போட்டிகளில் விளையாடிய ஒரே வீரர் என்ற சாதனையை படைக்க உள்ளார் எம்எஸ் தோனி. CSK-ஐ 5 முறை சாம்பியனாக்குவதன் மூலம் இந்த தருணத்தை அவரால் சிறப்பாக்க முடியும்.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் தோனி 15 போட்டிகளில் 104 ரன்கள் எடுத்து உள்ளார், ஆனால்,185.71 என்ற வியக்கத்தக்க ஸ்ட்ரைக் ரேட்டுடன் 8 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். இந்த ஆண்டு சிஎஸ்கேயின் ஃபினிஷராக இருந்து ள்ளார். எனவே, புகழ்பெற்ற விக்கெட் கீப்பர் பேட்டர் எம்எஸ் தோனி இன்று வரலாற்றில் 250 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையைப் பெறுவார்.

Tags :