- வீடு›
- விளையாட்டு›
- டாம் கர்ரனுக்கு அவுட் கொடுத்து முடிவை திரும்ப பெற்றதால் நடுவரை விமர்சித்த எம்எஸ் டோனி மனைவி
டாம் கர்ரனுக்கு அவுட் கொடுத்து முடிவை திரும்ப பெற்றதால் நடுவரை விமர்சித்த எம்எஸ் டோனி மனைவி
By: Karunakaran Wed, 23 Sept 2020 5:51:25 PM
ஐ.பி.எல். போட்டியின் நேற்றை ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சிடம் தோற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சிடம் தோற்றது. பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 200 ரன் எடுத்தது. இதனால் சி.எஸ்.கே. அணி 16 ரன் வித்தியாசத்தில் தோற்றது.
இதன் மூலம் சென்னை அணி முதல் தோல்வியை தழுவியது. ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்தபோது தீபக் சாஹர் வீசிய 18-வது ஓவரின் 5-வது பந்தில் டாம் கர்ரனின் பேட்டை பந்து உரசி சென்றதுபோல் இருந்தது. அதை கேட்ச் பிடித்த டோனி அப்பீல் செய்தார். நடுவரும் உடனடியாக அவுட் கொடுத்துவிட்டார்.
ஆனாலும் அவர் டி.ஆர்.எஸ்.க்கு அப்பீல் செய்தார். ராஜஸ்தான் ஏற்கனவே அதற்கான வாய்ப்பை இழந்து விட்டதால் டாம் கர்ரன் பெவிலியனுக்கு திரும்ப வேண்டியது உறுதியானது. டி.ஆர்.எஸ். முறையில் அவருக்கு அவுட் கொடுக்கப்படவில்லை. இது தொடர்பாக டோனி நடுவருடன் விவாதித்தார்.
இதுகுறித்து டோனியின் மனைவி சாக்ஷி நடுவரை தனது ட்விட்டர் பக்கத்தில், அவுட் என்றால் அவுட் கொடுங்கள். நீங்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்த விரும்பினால் அதை சரியாக செய்யுங்கள் என்று பதிவிட்டு விமர்சித்துள்ளார். ஆனால் அடுத்த சில விநாடிகளில் அந்த டுவிட்டை சாக்ஷி டோனி நீக்கிவிட்டார்.