- வீடு›
- விளையாட்டு›
- பிளேஆஃப்ஸ் சுற்றில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா
பிளேஆஃப்ஸ் சுற்றில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா
By: Karunakaran Fri, 06 Nov 2020 6:29:58 PM
ஐபிஎல் தொடரின் முதல் குவாலிபையர் துபாயில் நேற்று நடைபெற்றது. இதில் புள்ளி பட்டியலில் முதலில் உள்ள மும்பை இந்தியன்ஸ் அணியும், இரண்டாவது இடத்தில் உள்ள டெல்லி அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
இதில் டெல்லி அணியின் 2-வது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரின் ரோகித் சர்மா தான் சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக்அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இது பிளேஆஃப்ஸ் சுற்று மற்றும் நாக்அவுட் போட்டிகளில் அவரின் 3-வது டக்அவுட் இதுவாகும். மேலும் பிளேஆஃப்ஸ் சுற்றில் ரோகித் சர்மா பெரிதாக ஜொலித்தது கிடையாது.
இதுவரை 19 இன்னிங்சில் விளையாடி 229 ரன்களே அடித்துள்ளார். சராசரி 12.72 ஆகும். ஒரேயொரு முறை மட்டுமே 30 ரன்னைக் கடந்துள்ளார். நேற்றைய போட்டியில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் அரைசதமும், ஹர்திக் பாண்ட்யா அதிரடி ஆட்டத்தையும் வெளிப்படுத்தினர்.
இதனால் மும்பை இந்தியன்ஸ் 200 ரன்கள் அடித்து, 57 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் மும்பை அணியின் வீரர்களின் சிறப்பான பந்து வீச்சினால், டெல்லி அணியின் அதிரடி வீரர்கள் எளிதில் வீழ்ந்தனர். இதனால் மும்பை அணி குவாலிபையர் ஆனது.