Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 105 ரன்கள் எடுத்தது

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 105 ரன்கள் எடுத்தது

By: Karunakaran Sat, 19 Sept 2020 9:11:01 PM

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 105 ரன்கள் எடுத்தது

அபிதாபியில் இன்று நடக்கும் தொடக்க ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியன் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது. அதற்கான டாஸ் தற்போது சுண்டப்பட்டது. 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கி நவம்பர் 10-ந்தேதி வரை நடக்கவுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் முன்னிலையில் டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்கிஸ் அணியின் கேப்டன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன் படி மும்பை அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது.

mumbai indians,first match,ipl,chennai super kings ,மும்பை இந்தியன்ஸ், முதல் போட்டி, ஐபிஎல், சென்னை சூப்பர் கிங்ஸ்

தொடக்க வீரர்களாக மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் குயின்டன் டி காக் களமிறங்கினர். ரோகித் சர்மா 10 பந்துகளில் 12 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஆனால், மறு முனையில் அதிரடியாக அடிய டிகாக் 20 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து சாம் கரன் பந்து வீச்சில் அவுட் ஆனார். சூர்ய குமார் யாதவ் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

தற்போது 12 ஓவர்கள் முடிவடைந்த நிலையில் மும்பை அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 105 ரன்கள் எடுத்துள்ளது. திவார் 27 ரன்னிலும், பாண்டியா 12 ரன்னிலும் களத்தில் உள்ளனர். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். டோனி, ஐ.பி.எல். போட்டிகளில் கலந்து கொண்டு தனது திறமையை மீண்டும் நிரூபிக்கவுள்ளார்.

Tags :
|