Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • நேற்று நடைபெற்ற டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் முருகன் அஸ்வின் பிடித்த செம கேட்ச் வலைத்தளங்கள் வைரல்

நேற்று நடைபெற்ற டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் முருகன் அஸ்வின் பிடித்த செம கேட்ச் வலைத்தளங்கள் வைரல்

By: vaithegi Tue, 20 June 2023 11:07:09 AM

நேற்று நடைபெற்ற டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் முருகன் அஸ்வின் பிடித்த செம கேட்ச் வலைத்தளங்கள் வைரல்


டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் முருகன் அஸ்வின் கேட்ச் பிடித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் .. 7-வது சீசன் டிஎன்பிஎல் தொடர் தொடங்கி மிகவும் விறு விறுப்பாக நடைபெற்று கொண்டு வருகிறது. இதையடுத்து நேற்று நடைபெற்ற போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணியும், திண்டுக்கலில் உள்ள என்பிஆர் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் மோதியது.

இப்போட்டியில் முருகன் அஸ்வின் டைவ் செய்து பிடித்த கேட்ச் தான் தற்போது பேசும்பொருளாகியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லைகா கோவை கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் எடுத்தது.

websites .murugan ashwin ,வலைத்தளங்கள் .முருகன் அஸ்வின்

அதன் பின், 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவை அணி களமிறங்கியது. அப்போது, 3-வது ஓவரில், வேகப்பந்து வீச்சாளர் குர்ஜப்னீத் சிங், எஸ் அருணுக்கு எதிராக லெங்த் பந்து வீசினார். இப்பந்தை எதிர்கொண்ட எஸ் அருன் சிக்ஸர் அடிக்க முயன்றார்.

ஆனால் அப்போது, மிகவும் உயரத்திற்கு சென்ற அந்த பந்தை பார்த்துக்கொண்டே மின்னல் வேகத்தில் முருகன் அஸ்வின் கேட்ச் பிடித்தார். இதைடுத்து அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைராகி வரும் நிலையில், வீடியோவை பார்த்த பலரும் பாராட்டி அவரை வருகிறார்கள்.

Tags :