Advertisement

நான் எடுத்த முடிவு தவறானது... தோல்விக்கு பின் கூறிய தோனி

By: Nagaraj Mon, 15 May 2023 7:44:52 PM

நான் எடுத்த முடிவு தவறானது... தோல்விக்கு பின் கூறிய தோனி

மும்பை: நான் எடுத்த முடிவு தவறானது... முதல் பந்திலேயே நான் எடுத்த முடிவு தவறானது என்பதை உணர்ந்தேன் என்று தோல்விக்கு பிறகு பேட்டியளித்தார் தல தோனி.

நேற்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். முடிவு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

cricket,dhoni,ipl, ,தோனி, தோல்வி, பேட்டி, முதல் பந்து, உணர்ந்தேன்

இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் பனிப்பொழிவு காரணமாக பந்து திரும்பாததால் சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் திணறினர். நேற்று விழுந்த 4 விக்கெட்டுகளில் 3 விக்கெட்டுகளை தீபக் சாஹர் கைப்பற்றியதுடன், ஒரு விக்கெட் ரன் அவுட் ஆகும்.

தோல்விக்கு பின் பேட்டி அளித்த தோனி, 180 ரன்கள் எடுத்தால் தான் வெற்றி பெற முடியும் என்பதை முதல் பந்திலேயே தெரிந்து கொண்டேன். அப்போதுதான் நான் பேட்டிங்கைத் தேர்வு செய்திருக்கக் கூடாது என்பதை உணர்ந்தேன். போட்டியில் பனி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. “தோல்விக்கு யாரையும் குறை கூற விரும்பவில்லை, நாங்கள் அனைவரும் வெற்றி பெற எங்களால் முடிந்தவரை முயற்சி செய்தோம்,” என்று அவர் கூறினார்.

Tags :
|
|