- வீடு›
- விளையாட்டு›
- மீண்டும் போட்டியில் விளையாட ஒப்புக் கொண்டார் வீராங்கனை நவோமி
மீண்டும் போட்டியில் விளையாட ஒப்புக் கொண்டார் வீராங்கனை நவோமி
By: Nagaraj Fri, 28 Aug 2020 7:34:35 PM
டென்னிஸ் போட்டியில் மீண்டும் விளையாட ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா ஒப்புக் கொண்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் கருப்பினத்தவரை போலீசார் சுட்டதற்கு எதிராக குரல் கொடுத்து வெஸ்டர்ன் அன் சதர்ன் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து பாதியில் விலகிய நவோமி ஒசாகா மீண்டும் விளையாட ஒப்புக்கொண்டுள்ளார்.
இரண்டு முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டம் வென்ற ஜப்பான் வீராங்கனை
நவோமி ஒசாகா, டென்னிஸ் விளையாடுவதை விட கருப்பின பெண்ணாக முக்கிய
விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளதாக ட்வீட் செய்து
அரையிறுதி போட்டியில் இருந்து நேற்று விலகினார்.
இந்த நிலையில்,
பெண்கள் டென்னிஸ் சங்கம், அமெரிக்க டென்னிஸ் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று
போட்டிகளில் பங்கேற்க உள்ளதாக ஒசாகா தெரிவித்துள்ளார் என்று தகவல்கள்
வெளியாகி உள்ளது.