Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • தபால்துறையில் தேசிய அளவிலான கால்பந்து போட்டி இன்று தொடக்கம்

தபால்துறையில் தேசிய அளவிலான கால்பந்து போட்டி இன்று தொடக்கம்

By: Nagaraj Mon, 22 Aug 2022 08:09:13 AM

தபால்துறையில் தேசிய அளவிலான கால்பந்து போட்டி இன்று தொடக்கம்

சென்னை: தபால் துறை கால்பந்து போட்டி... இந்திய தபால் துறையின் தேசிய அளவிலான 34-ஆவது கால்பந்து போட்டி இன்று திங்கள்கிழமை (ஆக.22) தொடங்கி, வரும் 26-ஆம் தேதி வரை சென்னையில் நடைபெறவுள்ளது.

தமிழக தபால் துறையால் நடத்தப்படும் இப்போட்டியின் ஆட்டங்கள் அனைத்தும், நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளன. இப்போட்டியில் தமிழகம், டில்லி, அஸ்ஸாம், உத்தர பிரதேசம், கா்நாடகம், கேரளம், ஒடிஸா, மேற்கு வங்கம், ஜம்மு காஷ்மீா், ஹிமாசல பிரதேசம் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.

postal,football,knockout,matches,participating teams,today ,தபால்துறை, கால்பந்து, நாக் அவுட், ஆட்டங்கள், பங்கேற்கும் அணிகள், இன்று

போட்டியை திங்கள்கிழமை காலை, தெற்கு ரயில்வே பொது மேலாளா் பி.ஜி. மல்லையா தொடங்கி வைக்க, சா்வதேச கால்பந்து வீரா் சதீஷ் குமாா் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறாா். முதல் ஆட்டத்தில் தமிழகம் - ஒடிஸா அணிகள் மோதுகின்றன.

போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, முதலில் லீக் முறையிலும், பின்னா் நாக் அவுட் முறையிலும் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. இறுதி ஆட்டம் வரும் 26-ஆம் தேதி காலை 8 மணிக்கு நடைபெறவுள்ளது.

Tags :
|