- வீடு›
- விளையாட்டு›
- சென்னை கால்பந்து அணிக்கு பயிற்சி அளிக்க பேச்சுவார்த்தை
சென்னை கால்பந்து அணிக்கு பயிற்சி அளிக்க பேச்சுவார்த்தை
By: Nagaraj Wed, 15 June 2022 6:49:56 PM
சென்னை:சென்னை கால்பந்து அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமிக்கப்பட உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடர் நடக்கிறது. இதில் 2015-16, 2017-18 என இரு முறை கோப்பை வென்றது சென்னை அணி. இதன் பின் கடந்த சீசன்களில் சிறப்பாக செயல்படவில்லை. 2019-20ல் அரையிறுதி 'பிளே ஆப்' சுற்றுக்கு முன்னேறிய சென்னை, கடந்த இரு சீசன்களில் 8வது இடம் பிடித்து ஏமாற்றியது.
தற்போது காலியாக உள்ள பயிற்சியாளர் பதவிக்கு, இந்திய அணியின் முன்னாள்
பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டன்டைனை நியமிக்க பேச்சுவார்த்தை நடந்து
வருகிறது.
இந்திய அணிக்கு 2002-05, 2015-19 என இரு முறை
பயிற்சியாளராக இருந்துள்ளார். இவரது தலைமையில் இந்திய அணி சிறப்பான
வெற்றிகள் பெற்றது. 2002ல் எல்.ஜி., கோப்பை, 2019ல் ஆசிய கோப்பை வென்றது.
சென்னை அணியுடன் பேச்சுவார்த்தை நடப்பதை இங்கிலாந்தை சேர்ந்த கான்ஸ்டன்டைன் உறுதி செய்துள்ளார்.