Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • டோனியின் ஒரு சாதனை மட்டும் எப்போதும் நிலைத்திற்கும் - கவுதம் கம்பிர்

டோனியின் ஒரு சாதனை மட்டும் எப்போதும் நிலைத்திற்கும் - கவுதம் கம்பிர்

By: Karunakaran Mon, 17 Aug 2020 4:12:12 PM

டோனியின் ஒரு சாதனை மட்டும் எப்போதும் நிலைத்திற்கும் - கவுதம் கம்பிர்

இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்த எம்.எஸ். டோனி, நேற்று முன்தினம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். எம்.எஸ். டோனி, மூன்று ஐசிசி டிராபிகளை வென்ற கேப்டன், அதிகமுறை நாட்அவுட் கேப்டன், அதிக போட்டிகளில் விளையாடிய கேப்டன் என பல சாதனைகளை படைத்துள்ளார்.

அவரது ஓய்வு குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் பலர் அவரை புகழ்ந்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் ஐசிசி-யின் மூன்று டிராபிகளை வென்ற கேப்டன் என்ற சாதனை எப்போதுமே நிலைத்திருக்கும் என கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார்.

dhoni,gautam gambhir,indian cricketer,one record ,தோனி, கவுதம் கம்பீர், இந்திய கிரிக்கெட் வீரர், ஒரு சாதனை

இதுகுறித்து கவுதம் கம்பிர் கூறுகையில், ஒரு சாதனை பற்றி நீங்கள் பேசும்போது, மூன்று ஐசிசி டிராபிகளை வென்ற சாதனை எம்.எஸ். டோனியுடன் எப்போதும் இருக்கும். மற்ற எந்த கேப்டனும் இந்த சாதனையை முறியடிப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. இந்த விசேசமான சாதனை எப்போதுமே நிலைத்திருக்கும். இது எப்போதும் நிலைத்திருக்கும் என்று என்னால் பந்தயம் கூட கட்ட முடியும் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், இரட்டை சதம் கூட முறியடிக்கப்படலாம். யாராவது ஒரு பேட்ஸ்மேன் வந்து ரோகித் சர்மாவை விட அதிக டபுள் செஞ்சூரி அடிக்க வாய்ப்புள்ளது. ஆனால், எந்த கேப்டனாலும் மூன்று டிராபியை வெல்ல முடியும் என்று நான் நினைக்கவில்லை. ஆகவே, டோனி அந்த சாதனையுடன் நிலைத்திருப்பார் என்று புகழ்ந்து கூறியுள்ளார்.

Tags :
|