Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • நான் இல்லாமல் பாகிஸ்தான் உலகக் கோப்பையை இழந்தது - சோயப் அக்தர்

நான் இல்லாமல் பாகிஸ்தான் உலகக் கோப்பையை இழந்தது - சோயப் அக்தர்

By: Monisha Sun, 12 June 2022 5:24:47 PM

நான் இல்லாமல் பாகிஸ்தான் உலகக் கோப்பையை இழந்தது - சோயப் அக்தர்

இஸ்லாமாபாத் : உலகக்கோப்பை போட்டியில் இந்தியா -பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை காணும் ரசிகர்கள் உலகம் முழுவதும் பெருமளவில் உள்ளனர். இந்த இரு அணிகளும் உலகக்கோப்பை போட்டியில் மோதும்போது, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகள் நிலவும். இதனால் இந்த இரு அணிகள் இடையே நடக்கும் போட்டியை காணும் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகம்.

கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி போட்டியில் எம்.எஸ்.டோனி தலைமையிலான இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்த்து விளையாடியது. இதில் பாகிஸ்தான் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பின்னர், இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்திய இந்தியா 28 ஆண்டுகளுக்கு பின் உலகக்கோப்பையை வென்றது.

sohaib-aktar,2011-world-cup,india,pakistan,lose ,ஷோயப்-அக்தர், 2011-உலகக் கோப்பை, இந்தியா, பாகிஸ்தான், தோல்விகள்

உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி போட்டியில் இந்திய-பாகிஸ்தான் அணி மோதியபோது, பாகிஸ்தானை சேர்ந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் உடற்தகுதி காரணமாக இடம் பெறவில்லை. இதுகுறித்து தற்போது சோயப் அக்தர் கூறுகையில், என்னுடைய கிரிக்கெட் பயணத்தில் கடைசி 2 ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ளது என்று எனக்கு தெரியும். அதனால் உலகக் கோப்பையை வென்றுவிட்டு விடை பெறலாம் என்று ஆசைப்பட்டேன். ஆனால் உடற்தகுதியை காரணம் காட்டி அணி நிர்வாகம் எனக்கு வாய்ப்பு தரவில்லை.

அரையிறுதிப் போட்டியில் நான் விளையாடியிருந்தால் நிச்சயம் சச்சின் மற்றும் சேவாக்கை அவுட் செய்து இந்தியாவுக்கு தோல்வியை பரிசளித்திருப்பேன். ஆனால் நான் இல்லாமல் பாகிஸ்தான் தோற்றுவிட்டது. அந்த ஆட்டத்தை பார்த்து வேதனையாக இருந்தது என்று கூறியுள்ளார்.

Tags :
|