Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • நீங்கள் உருவாக்கிய உணர்வுகளை மக்கள் ஒரு போதும் மறக்கமாட்டார்கள் - டோனியின் மனைவி புகழாரம்

நீங்கள் உருவாக்கிய உணர்வுகளை மக்கள் ஒரு போதும் மறக்கமாட்டார்கள் - டோனியின் மனைவி புகழாரம்

By: Karunakaran Mon, 17 Aug 2020 4:35:32 PM

நீங்கள் உருவாக்கிய உணர்வுகளை மக்கள் ஒரு போதும் மறக்கமாட்டார்கள் - டோனியின் மனைவி புகழாரம்

இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்த எம்.எஸ். டோனி, நேற்று முன்தினம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். எம்.எஸ். டோனி, மூன்று ஐசிசி டிராபிகளை வென்ற கேப்டன், அதிகமுறை நாட்அவுட் கேப்டன், அதிக போட்டிகளில் விளையாடிய கேப்டன் என பல சாதனைகளை படைத்துள்ளார்.

அவரது ஓய்வு குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் பலர் அவரை புகழ்ந்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் டோனியின் மனைவி சாக்‌ஷி தனது ட்விட்டர் பக்கத்தில், நீங்கள் என்ன சாதித்து உள்ளர்களோ அதை நினைத்து பெருமைப்பட வேண்டும். கிரிக்கெட் விளையாட்டுக்காக சிறந்த பங்களிப்பை வழங்கியமைக்காக வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.

dhoni,shakshi,cricket,indian player ,தோனி, சாக்ஷி, கிரிக்கெட், இந்திய வீரர்

உங்களது சாதனைகளையும், எப்படிப்பட்ட நபர் என்பதையும் நினைத்து பெருமைப்படுகிறேன். நீங்கள் மிகவும் நேசித்த விளையாட்டில் இருந்து விடைபெறும் போது எவ்வளவு கண்ணீரை, உணர்ச்சியை கட்டுப்படுத்தி இருப்பீர்கள் என்பதை அறிவேன். ஆரோக்கியத்துடன், மகிழ்ச்சியுடன் இருக்க வாழ்த்துகள். இனி பல அற்புதமான விஷயங்கள் வர உள்ளன என்று சாக்‌ஷி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர், நீங்கள் சொன்னதை மக்கள் மறந்து விடுவார்கள். நீங்கள் செய்ததை மக்கள் மறந்து விடுவார்கள். ஆனால் நீங்கள் உருவாக்கிய உணர்வுகளை மக்கள் ஒரு போதும் மறக்கமாட்டார்கள் என அமெரிக்க பெண் கவிஞர் மாயா ஏஞ்சலோ சொன்ன தத்துவத்தை சுட்டிக்காட்டி பதிவிட்டுள்ளார்.

Tags :
|