Advertisement

நார்வே செஸ் தொடரில் வென்றார்…. பிரக்ஞானந்தா

By: vaithegi Sat, 11 June 2022 10:56:25 PM

நார்வே செஸ் தொடரில் வென்றார்…. பிரக்ஞானந்தா

சென்னை:

நார்வேயில் நடைபெற்ற குரூப் ஏ ஓபன் செஸ் போட்டித் தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய இளம்வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்.

மொத்தம் 9 சுற்றுக்கள் நடந்த இந்தப் போட்டியில் 6 போட்டிகளில் வெற்றி, 3 போட்டிகளில் டிரா என 7.5 புள்ளிகள் பெற்று பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்.

கடந்த மாதம் நடந்த மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் உலக சாம்பியன் கார்ல்சன் உள்ளிட்ட ஜாம்பவான்களை வீழ்த்தி பிரக்ஞானந்தா 2ம் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்போது நார்வே செஸ் தொடரின் இறுதிச்சுற்றில் பிரக்ஞானந்தா 49-வது நகர்த்தலில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார், இதனையடுத்து அவருக்கு பாராட்டு மழை பொழிந்து வருகிறது.

Tags :