Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ரோஹித் ஷர்மாவிற்கு டெஸ்ட் கேப் வழங்கினர் பிரதமர் நரேந்திர மோடி

ரோஹித் ஷர்மாவிற்கு டெஸ்ட் கேப் வழங்கினர் பிரதமர் நரேந்திர மோடி

By: vaithegi Thu, 09 Mar 2023 12:37:44 PM

ரோஹித் ஷர்மாவிற்கு டெஸ்ட் கேப் வழங்கினர் பிரதமர் நரேந்திர  மோடி

அகமதாபாத்: இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளின் கேப்டன்களுக்கு டெஸ்ட் போட்டிக்கான சிறப்பு தொப்பிகளை பிரதமர்கள் வழங்கல் ... இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடிவரும் 4 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டி இன்று அகமதாபாத், நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

இதனை அடுத்து இந்த போட்டியை நேரில் காண இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளின் பிரதமர்கள் வந்துள்ளனர்.

இந்த தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில், இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் வென்றால் மட்டுமே ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்ல முடியும் என்பதால் இன்றைய போட்டி இந்தியாவிற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

prime minister narendra modi,test cab ,பிரதமர் நரேந்திர  மோடி, டெஸ்ட் கேப்

எனவே போட்டிக்கு முன்னதாக, 2 பிரதமர்களும் கோல்ஃப் வண்டியில் வடிவமைக்கப்பட்ட “தேரில்” நரேந்திர மோடி மைதானத்தில் வலம் வந்தனர். 2 நாட்டு பிரதமர்களும் ரசிகர்களை நோக்கி கை அசைத்தவாறு மைதானத்தை சுற்றி வந்தனர்.

இதனையடுத்து இரு நாட்டு பிரதமர்களும், இரு அணிகளின் கேப்டன்களுக்கும் டெஸ்ட் போட்டிக்கான சிறப்பு தொப்பிகளை வழங்கினர்.

Tags :