- வீடு›
- விளையாட்டு›
- சுழற்பந்து வீரர் முருகன் அஸ்வினை பஞ்சாப் அணி சரியாக பயன்படுத்தவில்லை - தெண்டுல்கர் விமர்சனம்
சுழற்பந்து வீரர் முருகன் அஸ்வினை பஞ்சாப் அணி சரியாக பயன்படுத்தவில்லை - தெண்டுல்கர் விமர்சனம்
By: Karunakaran Tue, 29 Sept 2020 2:29:27 PM
துபாயில் தற்போது 13-வது ஐபில் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 8 அணிகள் மோதி வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 223 ரன் எடுத்து தோல்வியடைந்தது. 224 ரன் இலக்கை எடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் ஐ.பி.எல்.லில் புதிய சாதனை படைத்தது.
இந்த போட்டியில் தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீரர் முருகன் அஸ்வினை பஞ்சாப் அணி சரியாக பயன்படுத்தவில்லை என்று கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கர் விமர்சித்துள்ளார். இதுகுறித்து சச்சின் கூறுகையில், ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சுமித், சஞ்சு சாம்சன், திவேதியா ஆகியோரது பேட்டிங் அபாரமாக இருந்தது என்று கூறினார்.
மேலும் அவர், பெரிய இலக்கை வெற்றிகரமாக விரட்டினார்கள். அமைதியாக ஆடி பிறகு அதிரடியை வெளிப்படுத்தினார்கள். கிங்ஸ் லெவன் பஞ்சாப் வேகப்பந்து வீரர்கள் யார்க்கர்களை வீசாதது ஆச்சரியமாக இருந்தது. இதேபோல சுழற்பந்து வீரர் முருகன் அஸ்வினையும் சரியாக பயன்படுத்தவில்லை. இது அதிர்ச்சி அளித்தது என்று தெரிவித்தார்.
ராஜஸ்தான் ராயல்ஸ்- கிங்ஸ் லெவன் பஞ்சாப் மோதிய இந்த ஆட்டத்தில் முருகன் அஸ்வின் 1.3 ஓவர்கள் வீசி 16 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார். பந்து வீச்சில் சிறப்பாக அமையாததாலேயே கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அதிக இலக்கை நிர்ணயித்தது என்று கூறலாம்.