- வீடு›
- விளையாட்டு›
- ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ரபேல் நடால் அரை இறுதிக்கு தகுதி
ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ரபேல் நடால் அரை இறுதிக்கு தகுதி
By: Karunakaran Fri, 20 Nov 2020 3:50:10 PM
டாப் 8 வீரர்கள் பங்கேற்கும் ஏ.டி.பி. உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்று லண்டனில் நடந்து வருகிறது. 8 வீரர்களும் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பிரிவிலும் 4 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
ஒரு பிரிவில் டோமினிக்தீம் (ஆஸ்திரியா), மற்றொரு பிரிவில் மெத்வதேவ் (ரஷியா) ஆகியோர் அரை இறுதிக்கு தகுதி பெற்றுவிட்டனர். ஸ்வாட்மென் (அர்ஜென்டினா), ஆந்த்ரே ரூப்லேவ் (ரஷியா) ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இன்று நடந்த ஆட்டம் ஒன்றில் 2-ம் நிலை வீரர் ரபேல் நடால் (ஸ்பெயின்)-சிட்சிபாஸ் (கிரீஸ்) ஆகியோர் மோதினர். இதில் ரபேல் நடால் 6-4, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார். இதன் மூலம் ரபேல் நடால் அரை இறுதிக்கு தகுதிபெற்றார்.
ரபேல் நடால் அரை இறுதியில் மெத்வதேவுடன் நாளை மோதுகிறார். இன்று நடக்கும் ஆட்டம் ஒன்றில் நம்பர் 1 வீரர் ஜோகோவிச் (செர்பியா)-அலெக்சாண்டர் ஸ்வரேவ் (ஜெர்மனி) மோதுகிறார்கள். இதில் வெற்றிபெறுபவர் அரை இறுதிக்கு தகுதி பெறுவார்.