Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோரை மட்டுமே சார்ந்து ஆர்சிபி அணி இல்லை - உமேஷ் யாதவ்

விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோரை மட்டுமே சார்ந்து ஆர்சிபி அணி இல்லை - உமேஷ் யாதவ்

By: Karunakaran Thu, 03 Sept 2020 7:49:36 PM

விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோரை மட்டுமே சார்ந்து ஆர்சிபி அணி இல்லை - உமேஷ் யாதவ்

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக விராட் கோலி திகழ்ந்து வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள ஏபி டி வில்லியர்சும் சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர். இவர்கள் இருவரும் ஆர்சிபி அணிக்காக விளையாடி வருகின்றனர். இந்த இரண்டு பேரும் உடனடியாக ஆட்டம் இழந்தால், அந்த அணி திணறிவிடும்.

இருவரும் அந்த அணியின் பேட்டிங்கில் முதுகெலும்பாக உள்ளதால், இருவரையும் சார்ந்தே அணி இருக்கிறது என கூறப்பட்டு வருகிறது. தற்போது இருவரையும் சார்ந்துதான் ஆர்சிபி அணி உள்ளது என்பதை ஏற்க இயலாது என அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளராக உள்ள உமேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

rcb team,virat kohli,ab de villiers,umesh yadav ,ஆர்.சி.பி அணி, விராட் கோஹ்லி, ஏபி டிவில்லியர்ஸ், உமேஷ் யாதவ்

இதுகுறித்து வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் கூறுகையில், அவர்கள் எங்களுக்கு ஏராளமான ஆட்டங்களையும் வென்று கொடுத்துள்ளனர். நாங்கள் அவர்களை நம்பியிருப்பதாக மக்கள் கூறுவார்கள், ஆனால், கடந்த வருடம் நடைபெற்ற கடைசி போட்டியை பார்த்தால், குர்கீரத் மான், ஹெட்மையர் எங்களுக்கு போட்டியை வென்று கொடுத்தனர். ஆகவே, உண்மையிலேயே இரண்டு பேரை மட்டும் நாங்கள் சார்ந்திருக்கவில்லை என்று கூறினார்.

மேலும் அவர், எங்கள் அணியில் 11 வீரர்கள் உள்ளனர். அவர்கள் இரண்டு பேரையும் மட்டுமே நம்பியிருந்தால், அதன்பிறகு மற்றவர்கள் ஏன் விளையாட வேண்டும். ஒவ்வொரு நபரும் அணிக்கு தங்களது பங்களிப்பை அளித்து வருகின்றனர். மற்றவர்களை விட இரண்டு பேரும் சற்று அதிகமான பங்களிப்பை கொடுக்கின்றனர் என்று கூறினார்.

Tags :