Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • 13.3 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்கள் எடுத்து ஆர்சிபி அபார வெற்றி

13.3 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்கள் எடுத்து ஆர்சிபி அபார வெற்றி

By: Karunakaran Thu, 22 Oct 2020 12:07:07 PM

13.3 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்கள் எடுத்து ஆர்சிபி அபார வெற்றி

13 வது ஐபிஎல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்று இதில் விளையாடி வருகின்றன. இந்நிலையில் ஐபிஎல் தொடரின் 39-வது லீக் ஆட்டம் அபு தாபியில் நேற்று இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்று கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 84 ரன்களே அடித்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மோர்கன் அதிகபட்சமாக 30 ரன்கள் அடித்தார். ஆர்சிபி அணியில் முகமது சிராஜ் 3 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் 85 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி அணி களமிறங்கியது.

rcb,85 runs,2 wickets,kolkata team ,ஆர்.சி.பி., 85 ரன்கள், 2 விக்கெட், கொல்கத்தா அணி

தொடக்க ஆட்டக்காரர்களாக ஆர்சிபி அணியின் தேவ்தத் படிக்கல், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் களம் இறங்கினர். தேவ்தத் படிக்கல் 25 ரன்னிலும், பிஞ்ச் 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இந்த ஜோடி 6.2 ஓவரில் 46 ரன்கள் சேர்த்தது. அதன்பின் வந்த குர்கீரத் சிங் மான் 21 ரன்களும், விராட் கோலி 18 ரன்களும் அடித்தனர்.

இதனால் ஆர்சிபி 13.3 ஓவரில் 85 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து தினேஷ் கார்த்திக் விலகியதால், மோர்கன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|