Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையவில்லை - ரோகித் சர்மா

காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையவில்லை - ரோகித் சர்மா

By: Karunakaran Sun, 22 Nov 2020 2:33:18 PM

காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையவில்லை - ரோகித் சர்மா

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா, சமீபத்தில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அவரது தலைமையிலான மும்பை அணி 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தி சாதனை படைத்தது. ஐ.பி.எல். தொடரின் போது ரோகித் சர்மாவுக்கு இடது பின்தொடை தசைநாரில் கிழிவு ஏற்பட்டது. இதனால் சில ஆட்டங்களில் அவர் விளையாடவில்லை.

அந்நேரத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் அவரது பெயர் இடம் பெறவில்லை. ஆனால் அடுத்த சில தினங்களில் இறுதிப்போட்டி உள்பட மும்பை இந்தியன்ஸ் அணியின் கடைசி 3 ஆட்டங்களில் பங்கேற்று விளையாடினார். இதனால் அவரது காயத்தன்மை கிரிக்கெட் வட்டாரத்தில் விவாதப்பொருளாக மாறியது. அதன்பின், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் மட்டும் ரோகித் சர்மா சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

rohit sharma,leg injury,indian team,cricket player ,ரோஹித் சர்மா, கால் காயம், இந்திய அணி, கிரிக்கெட் வீரர்

ஐ.பி.எல். முடிந்ததும் இந்திய வீரர்கள் துபாயில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு சென்றனர். ஆனால் ரோகித் சர்மாவுக்கு உடல்தகுதியை நிரூபிக்க அறிவுறுத்தப்பட்டதால் தாயகம் திரும்பினார். சில தினங்களுக்கு முன்பு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்ற ரோகித் சர்மா அங்கு உடல்தகுதியை நிரூபிப்பதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் காயம் தொடர்பாக தனது நிலைப்பாடு குறித்து 33 வயதான ரோகித் சர்மா முதல்முறையாக விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில், எனது காயம் தொடர்பாக மக்கள் என்ன பேசிக்கொண்டிருந்தார்கள் என்பது பற்றி உண்மையிலேயே எனக்கு தெரியாது. ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியத்திடமும், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்திடமும் எனது காயம் குறித்து தொடர்ந்து தகவல் தெரிவித்த வண்ணம் இருந்தேன். காயத்தில் இருந்து மீண்டு இன்னும் நன்றாக இருப்பதாக உணர்கிறேன். நீண்ட வடிவிலான போட்டிகளில் ஆடுவதற்கு முன்பாக தெளிவான சிந்தனையுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். தொடை தசைநார் பிரச்சினையை முழுமையாக சரி செய்ய இன்னும் கொஞ்சம் உழைக்க வேண்டி உள்ளது. அதனால் தான் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு செல்லவில்லை என்று கூறினார்.

Tags :