Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • காயத்தில் இருந்து குணமடையாததால் டி20 போட்டிகளில் ரோஹித் சர்மா விளையாட மாட்டார்

காயத்தில் இருந்து குணமடையாததால் டி20 போட்டிகளில் ரோஹித் சர்மா விளையாட மாட்டார்

By: Nagaraj Wed, 28 Dec 2022 11:40:54 AM

காயத்தில் இருந்து குணமடையாததால் டி20 போட்டிகளில் ரோஹித் சர்மா விளையாட மாட்டார்

புதுடெல்லி: ரோஹித் சர்மா தனது கட்டைவிரல் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால் டி20 போட்டிகளில் விளையாட மாட்டார் என்று தெரிய வந்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த வாரம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ளது. சேத்தன்சர்மா தலைமையிலான அணி இன்று கூடி அணியை தேர்வு செய்யவுள்ளது.

ரோஹித் சர்மா தனது கட்டைவிரல் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால் டி20 போட்டிகளில் விளையாட மாட்டார். பிப்ரவரியில் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் வருவதால், பிசிசிஐ எந்த ரிஸ்க்கும் எடுக்க விரும்பவில்லை. மருத்துவக்குழு காயம் மதிப்பீட்டை நடத்தும். 100% குணமடைந்தால் மட்டுமே ரோஹித் சர்மா அணிக்கு திரும்புவார் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

injury,rohit sharma,sri lanka, ,இலங்கை, காயம், ரோஹித் சர்மா, விளையாடமாட்டார், பந்து வீச்சு

மேலும், மோசமான பார்ம் காரணமாக கே.எல்.ராகுலுக்கும், அனுபவ வீரர் விராட் கோலிக்கும் வாய்ப்பு வழங்கப்படாது எனத் தெரிகிறது. டி20 போட்டிக்கான கேப்டனாக ஹர்திக் பாண்டியா அறிவிக்கப்பட உள்ளார்.

டி20 அணியில் ரிஷப் பந்த், இஷான்கிஷன், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஷ்ரேயாஸ் ஐயர், தீபகுடா, பிருத்வி ஷா, ருதுராஜ் கெய்ட்வாட் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர் மற்றும் பந்துவீச்சில் புவனேஸ்வர்குமார், உம்ரான் கான், ஹர்சல் படேல், தீபக்ஷகர் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

Tags :
|