Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு ரோகித் சர்மா ருசிகரமான பதில்

இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு ரோகித் சர்மா ருசிகரமான பதில்

By: Karunakaran Mon, 15 June 2020 1:48:01 PM

இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு ரோகித் சர்மா ருசிகரமான பதில்

கொரோனா காரணமாக போடப்பட்ட ஊரடங்கினால் கிரிக்கெட் வீரர்கள் வீட்டிலே முடங்கியுள்ளனர். தற்போது ஐ.பி.ல் போட்டி நடத்துவது குறித்து ஆலோசித்து வருகின்றனர். வீட்டிலே முடங்கியுள்ள வீரர்கள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர். இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா, இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களின் உரையாடி அவர்களது கேள்விகளுக்கு பதிலளித்தார்.

ரசிகர்கள் கேட்ட கேள்வியும், அவர் அளித்த பதிலும் பின்வருமாறு:
கேள்வி : இந்த ஆண்டில் 20 ஓவர் உலகக் கோப்பை அல்லது ஐ.பி.எல். கிரிக்கெட் இரண்டில் எதற்கு முன்னுரிமை அளிப்பீர்கள்?
பதில் : இரண்டுக்கும்.

கேள்வி : தற்போதைய காலக்கட்டத்தில் எந்த பேட்ஸ்மேன்களின் ஆட்டத்தை நீங்கள் அதிகமாக ரசிக்கிறீர்கள்?
பதில் : ஜாசன் ராய் (இங்கிலாந்து வீரர் ), ஸ்டீவன் சுமித் (ஆஸ்திரேலியா வீரர் )

rohit sharma,indian cricket,deputy captain,fans question ,ரோகித் சர்மா,கிரிக்கெட்,துணை கேப்டன்,ரசிகர்கள் கேள்வி

ஊரடங்கு முடிந்ததும் அடுத்தகட்ட திட்டம் என்ன? என்ற ரசிகரின் கேள்விக்கு அவர், மீண்டும் கிரிக்கெட் விளையாடுவது தான் என்று பதிலளித்தார். மேலும், ஒரு நாள் கிரிக்கெட்டில் முச்சதம், 20 ஓவர் கிரிக்கெட்டில் இரட்டை சதம் - இதில் உங்களது விருப்பம்? என்ற கேள்விக்கு, இரண்டுமே நடந்தால் சந்தோஷம் தானே....வேறென்ன? என்று பதிலளித்தார்.

சச்சின் தெண்டுல்கர், டோனி ஆகியோரில் உங்களது தேர்வு? என்று ரசிகர் கேட்ட கேள்விக்கு புன்னகையுடன் நான் சாக வேண்டும் என்று விரும்புகிறீர்களா? என்று ரோஹித் சர்மா பதிலளித்தார். மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்து? ரசிகர் கேட்ட கேள்விக்கு அவர், மிகச்சிறந்த அணி என்று பதிலளித்தார்.



Tags :