Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • மீண்டும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்த ரோஹித்... எப்போது பார்ம்முக்கு திரும்புவார்?

மீண்டும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்த ரோஹித்... எப்போது பார்ம்முக்கு திரும்புவார்?

By: Nagaraj Wed, 10 May 2023 9:20:12 PM

மீண்டும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்த ரோஹித்... எப்போது பார்ம்முக்கு திரும்புவார்?

மும்பை: பார்முக்கு எப்போது திரும்புவார்... ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தொடர்ந்து 5வது முறையாக ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தார். ஐபிஎல் தொடரில் இந்த சாதனையை படைத்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

ரோஹித்தின் ஆட்டம் தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதால், அவர் எப்போது பார்முக்கு திரும்புவார் என ரசிகர்கள் தவித்து வருகின்றனர். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா உள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அடுத்த மாதமும், அதன்பின்னர் ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் உள்ளிட்ட முக்கிய ஆட்டங்கள் வரிசையில் உள்ளன. இந்நிலையில் ரோஹித் ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது மும்பை அணியின் ரசிகர்களை மட்டுமல்லாமல் இந்திய அணியின் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

5th innings,match,rohit sharma,single digit, ,5 ஆவது முறை, ஆட்டம், ஒற்றை இலக்கம், ரோஹித் சர்மா

அவர் கடந்த 5 இன்னிங்ஸ்களில் 2, 3, 0, 0, 7 என ஒற்றை இலக்கத்தில் ரன்களை எடுத்து ஆட்டமிழந்துள்ளார். ரோகித் சர்மா ரன் குவிக்க தவறினாலும், அவரது அணியில் இருந்த மற்ற வீரர்கள் அதிரடி காட்டி அணியை வெற்றி பெற செய்தனர்.

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பின்னர் தொடர்ந்து பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 199 ரன்கள் எடுக்க, அடுத்து பேட் செய்த மும்பை அணி 16.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது.

மும்பை அணியின் சூர்ய குமார் யாதவ் 83 ரன்களும், நேஹால் வதேரா 52 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி 11 போட்டிகளில் 6ல் வெற்றி பெற்று 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Tags :
|