Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • அர்ஜுனா விருதுக்கான பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது குறித்து சாக்சி மாலிக் கேள்வி

அர்ஜுனா விருதுக்கான பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது குறித்து சாக்சி மாலிக் கேள்வி

By: Karunakaran Sun, 23 Aug 2020 6:10:19 PM

அர்ஜுனா விருதுக்கான பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது குறித்து சாக்சி மாலிக் கேள்வி

2020-ம் ஆண்டுக்கான விளையாட்டுத் துறை விருதுகள் வென்ற வீரர், வீராங்கனைகளின் பட்டியல் நேற்று முன்தினம் வெளியானது. இதில் 5 பேருக்கு கேல் ரத்னா விருதும், 27 பேருக்கு அர்ஜுனா விருதும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் அர்ஜுனா விருதில் சர்ச்சை கிளம்பியுள்ளது. அர்ஜுனா விருதுக்கு 29 பேர் பரிந்துரைக்கப்பட்டு இருந்த நிலையில், ஏற்கனவே கேல் ரத்னா விருதை வென்ற மீராபாய் சானு மற்றும் சாக்சி மாலிக் பெயர்கள் மட்டும் நீக்கப்பட்டது.

கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருதை விட உயர்ந்ததாகும். மல்யுத்த வீராங்கனையான சாக்சி மாலிக் 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம், 2017 காமன்வெல்த் போட்டியில் தங்கம், ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி, 2018 காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் என பதக்கங்களை வென்றுள்ளார்.

sakshi malik,arjuna award,wrestling,india ,சாக்ஷி மாலிக், அர்ஜுனா விருது, மல்யுத்தம், இந்தியா

இந்நிலையில் 2020-ம் ஆண்டுக்கான அர்ஜுனா விருதுக்கு சாக்சி மாலிக் பெயர் பரிந்துரை செய்யப்பட்டும், இறுதிப் பட்டியலில் நீக்கப்பட்டது குறித்து அவர் ஏமாற்றம் அடைந்துள்ளார். தற்போது அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தனக்கு அர்ஜுனா விருது கிடைக்கவே கிடைக்காதா? என பிரதமர் நரேந்திர மோடி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு-விடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

சாக்சி மாலிக் தனது ட்விட்டர் பக்கத்தில், எனக்கு கேல் ரத்னா விருது அளிக்கப்பட்டது பெருமையாக உள்ளது. ஒவ்வொரு விளையாட்டு வீரரும் அனைத்து விருதுகளையும் வெல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். நான் கூட என் பெயர் அர்ஜுனா விருதுப் பட்டியலில் இடம்பெறும் என கனவு காண்கிறேன். இன்னும் என்னென்ன பதக்கங்கள் என் நாட்டுக்காக நான் வென்றால் எனக்கு அர்ஜுனா விருது கிடைக்கும்? அல்லது இந்த மல்யுத்த வாழ்க்கையில் எனக்கு இந்த விருதை வெல்லும் அதிர்ஷ்டமே இல்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags :