Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • எஸ்.பி.பி, டீன் ஜோன்ஸ் மறைவையொட்டி கையில் கருப்பு பட்டை அணிந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

எஸ்.பி.பி, டீன் ஜோன்ஸ் மறைவையொட்டி கையில் கருப்பு பட்டை அணிந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

By: Karunakaran Sat, 26 Sept 2020 1:52:57 PM

எஸ்.பி.பி, டீன் ஜோன்ஸ் மறைவையொட்டி கையில் கருப்பு பட்டை அணிந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

13-வது ஐபில் கிரிக்கெட் போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை பந்து வீச்சை முதலில் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்துள்ளது. சென்னை அணி 7 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் டெல்லி அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மற்றும் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் ஆகியோரின் மறைவையொட்டி அனுதாபம் தெரிவிக்கும் வகையில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர்.

sbp,chennai super kings,black belt,dean jones ,எஸ்.பி.பி, சென்னை சூப்பர் கிங்ஸ், பிளாக் பெல்ட், டீன் ஜோன்ஸ்

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர்களும் கருப்பு பட்டை அணிந்து துக்கத்தில் பங்கெடுத்தனர்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் அஸ்வின், தினேஷ் கார்த்திக், ஷிகர் தவான் முன்னாள் வீரர்கள் ஸ்ரீகாந்த், அனில் கும்பிளே, வி.வி.எஸ்.லட்சுமண், கவுதம் கம்பீர் மற்றும் செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட விளையாட்டு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக், ‘எனக்கு மிகவும் பிடித்தமான கலைஞர் எஸ்.பி.பி. மறைந்து விட்டார். ஒரு முறை அவரது வீட்டுக்கு சென்றபோது எனக்கு விருப்பமான பாடலின் சில வரிகளை தனியாக பாடி காட்டினார். அந்த நாளை எப்போதும் மறக்க மாட்டேன். அதே போல் இன்னொரு முறை அவரிடம் இருந்து பாடல் கேட்க ஆசை. ஆனால் அந்த ஆசை மட்டும் வாழ்நாள் முழுவதும் நிறைவேறாத கனவாக இருக்கப்போகிறது என்று பதிவிட்டுள்ளார்.

Tags :
|