Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • சையத் முஷ்டாக் அலி கோப்பை அரையிறுதி போட்டியில் அதிரடி காட்டிய ஷ்ரேயாஸ் அய்யர்

சையத் முஷ்டாக் அலி கோப்பை அரையிறுதி போட்டியில் அதிரடி காட்டிய ஷ்ரேயாஸ் அய்யர்

By: Nagaraj Fri, 04 Nov 2022 11:01:55 AM

சையத் முஷ்டாக் அலி கோப்பை அரையிறுதி போட்டியில் அதிரடி காட்டிய ஷ்ரேயாஸ் அய்யர்

கொல்கத்தா: சையத் முஷ்டாக் அலி கோப்பை அரையிறுதி போட்டியில் ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடி காட்டி 44 பந்துகளில் 73 ரன்கள் எடுத்தார். இறுதியில் மும்பை அணி 16.5 ஓவரில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 169 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

சையத் முஷ்டாக் அலி கோப்பையின் அரையிறுதிப் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. முதல் அரையிறுதி ஆட்டம் பஞ்சாப் மற்றும் இமாச்சல பிரதேசம். முதலில் பேட் செய்த ஹிமாச்சல பிரதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 163 ரன்கள் எடுத்து போராடி தோல்வியடைந்தது. இதன் மூலம் ஹிமாச்சல பிரதேச அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

kolkata,mumbai,shreyas-iyer,syed mushtaq ali ,இமாச்சல பிரதேசம், கொல்கத்தா, மும்பை அணி, ஷ்ரேயாஸ் அய்யர்

2வது அரையிறுதியில் மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் விதர்பாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. முதலில் பேட் செய்த விதர்பா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை அணிக்கு பிரித்வி ஷா திறம்பட துவக்கம் கொடுத்தார்.

அவர் 21 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடி காட்டி 44 பந்துகளில் 73 ரன்கள் எடுத்தார். இறுதியில் மும்பை அணி 16.5 ஓவரில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 169 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சையது முஷ்டாக் அலி கோப்பை இறுதிப் போட்டி இமாச்சல பிரதேசம் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நாளை மறுநாள் நடைபெறுகிறது.

Tags :
|