Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • டெல்லி அணியை ஷ்ரேயாஸ் அய்யர் நம்ப முடியாத வகையில் வழிநடத்திச் செல்கிறார் - ரபடா புகழாரம்

டெல்லி அணியை ஷ்ரேயாஸ் அய்யர் நம்ப முடியாத வகையில் வழிநடத்திச் செல்கிறார் - ரபடா புகழாரம்

By: Karunakaran Thu, 22 Oct 2020 8:23:07 PM

டெல்லி அணியை ஷ்ரேயாஸ் அய்யர் நம்ப முடியாத வகையில் வழிநடத்திச் செல்கிறார் - ரபடா புகழாரம்

ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 7-ல் வெற்றி பெற்றுள்ளது. இன்னும் ஒரு போட்டியில் வெறறி பெற்றால் பிளே-ஆஃப்ஸ் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும். இந்நிலையில், அந்த அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 335 ரன்கள் விளாசியுள்ளார்.

அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரபடா 20 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்தி பர்பிள் கேப்பை கைப்பற்றி அசத்தி வருகிறார். தற்போது, ஷ்ரேயாஸ் அய்யரின் கேப்டன் பதவி குறித்து ரபடா கூறுகையில், ஷ்ரேயாஸ் அய்யர் உண்மையிலேயே நம்பமுடியாத வகையில் கேப்டன் பதவியில் செயல்பட்டு வருகிறார். அவர் இளம் வீரர் என கூறினார்.

shreyas iyer,delhi team,ipl 2020,rabada ,ஸ்ரேயாஸ் ஐயர், டெல்லி அணி, ஐபிஎல் 2020, ரபாடா

மேலும் அவர், மிகப்பெரிய நிலையில் வெளிநாட்டு வீரர்களை ஷ்ரேயாஸ் அய்யர் வழிநடத்தி செல்வதை பார்க்கும்போது, அந்த பொறுப்பு மிகப்பெரியது. தற்போது வரை அவர் சிறப்பாக கையாண்டு வருகிறா். முன் நின்று அணியை வழிநடத்திச் செல்கிறார். அவர் ஒரு சாதாரணமாக நபர் என தெரிவித்தார்.

களத்திற்குள் இறங்கிய பின்னர், ஷ்ரேயாஸ் அய்யர் எடுக்கும் முடிவுகளுக்கு, தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் உதவியாக இருக்கிறார் என்பதை என்னால் உறுதியாக கூற இயலும் என வேகப்பந்து வீச்சாளர் ரபடா தெரிவித்துள்ளார். கடந்த ஆட்டத்தில் டெல்லி அணி பஞ்சாப் அணியிடம் தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Tags :