Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • டென்மார்க் பேட்மிண்டன் போட்டி கால் இறுதியில் தோல்வியடைந்த இந்திய வீரர் ஸ்ரீகாந்த்

டென்மார்க் பேட்மிண்டன் போட்டி கால் இறுதியில் தோல்வியடைந்த இந்திய வீரர் ஸ்ரீகாந்த்

By: Nagaraj Sat, 17 Oct 2020 6:02:53 PM

டென்மார்க் பேட்மிண்டன் போட்டி கால் இறுதியில் தோல்வியடைந்த இந்திய வீரர் ஸ்ரீகாந்த்

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி கால் இறுதியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த்தினை வீழ்த்தியுள்ளார் சீன வீரர் சோய் டின் சென்.

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியானது டென்மார்க்கில் உள்ள ஒடென்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் நேற்று ஆண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டமானது நடைபெற்றது. அதாவது இந்தப் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் சீன வீரர் சீன வீரர் சோய் டின் சென்னுக்கு எதிராகக் களம் இறங்கினார்.

அதாவது இந்த ஆட்டமானது துவக்கம் முதலே மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. முதல் செட்டில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் மற்றும் சீன வீரர் சோய் டின் சென் இருவரும் மாறி புள்ளிகளை எடுத்தனர். ஒவ்வொரு நிமிடமும் விறுவிறுப்பாக நடந்த இந்த செட்டினை ஸ்ரீகாந்த் 22-20 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

denmark,open badminton,srikanth,chinese player choi tin ,டென்மார்க், ஓபன் பேட்மிண்டன், ஸ்ரீகாந்த், சீன வீரர் சோய் டின்

அடுத்து இரண்டாவது செட்டில் சுதாரித்த சோய் டின் சென் ஸ்ரீகாந்த்திற்கு எதிராகக் கடுமையான போட்டியாளராக விளங்கினார். சோய் டின் சென் 2 வது செட்டை 21-13 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

3 வது செட்டில் யார் வெற்றி பெறுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்க இந்த செட்டிலும் சோய் டின் சென் ஸ்ரீகாந்த்தினை வீழ்த்தி 21-16 என்ற கணக்கில் 3 வது செட்டைக் கைப்பற்றினார். இறுதியில் சோய் டின் சென் 20-22, 21-13, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

Tags :