- வீடு›
- விளையாட்டு›
- இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு தனது ஓய்வு குறித்து அதிகாரபூர்வ தகவலை அனுப்பிய சுரேஷ்ரெய்னா
இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு தனது ஓய்வு குறித்து அதிகாரபூர்வ தகவலை அனுப்பிய சுரேஷ்ரெய்னா
By: Karunakaran Tue, 18 Aug 2020 2:45:58 PM
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி தனது ஓய்வு முடிவை கடந்த சனிக்கிழமை அன்று தனது ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டார். டோனி அறிவித்த சில நிமிடங்களில் அவரது நண்பரும், இடக்கை பேட்ஸ்மேனுமான சுரேஷ்ரெய்னாவும் கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுவதாக அறிவித்தார். இது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு முறையாக தகவல் தெரிவித்து விட்டு தனது ஓய்வு முடிவை டோனி அறிவித்தார். ஆனால் சுரேஷ் ரெய்னா இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு எந்தவித தகவலும் தெரிவிக்காமல் ஓய்வு முடிவை வெளியிட்டுள்ளார். ஓய்வை வெளிப்படையாக அறிவித்ததற்கு மறுநாள் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு தனது ஓய்வு குறித்து அதிகாரபூர்வ தகவலை அனுப்பினார்.
ஓய்வு அறிவிக்கும் முன் கிரிக்கெட் வாரியத்திற்கு தகவல் தெரிவிப்பது வழக்கம். இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இடக்கை அதிரடி ஆட்டக்காரரான சுரேஷ் ரெய்னா சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் முடிவை ஞாயிற்றுக்கிழமை இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு அதிகாரபூர்வாக அனுப்பி வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுரேஷ் ரெய்னா தலைமையில் இந்திய அணி, வெஸ்ட்இண்டீஸ் மற்றும் வங்காளதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும், ஜிம்பாப்வேக்கு எதிரான 20 ஓவர் தொடரையும் கைப்பற்றி இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்ற சுரேஷ் ரெய்னாவுக்கு இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் வாழ்த்து கூறினர்.