Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • மாநில அளவிலான கராத்தே போட்டியில் தஞ்சை வின்னர் அகாடமி மாணவர்கள் வெற்றி

மாநில அளவிலான கராத்தே போட்டியில் தஞ்சை வின்னர் அகாடமி மாணவர்கள் வெற்றி

By: Nagaraj Tue, 08 Aug 2023 8:39:12 PM

மாநில அளவிலான கராத்தே போட்டியில் தஞ்சை வின்னர் அகாடமி மாணவர்கள் வெற்றி

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் நடந்த மாநில அளவிலான கராத்தே போட்டியில் தஞ்சை வின்னர் அகாடமி மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் நலம் ஸ்போர்ட்ஸ் சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 500க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

vetri,winner academy,praise,greetings,thanjavur ,வெற்றி, வின்னர் அகாடமி, பாராட்டு, வாழ்த்து, தஞ்சாவூர்

இப்போட்டியில் தஞ்சை வின்னர் அகாடமியை சேர்ந்த கராத்தே மாணவர்கள் மித்ரன், திஜில் கடியாளா, முகமது ஆரிப், ஸ்ரீமதி, அபிலாஷா, புவிதா ஸ்ரீ, கீர்த்திநாத் ஆகியோர் முதல் பரிசு வென்றனர்.

மேலும் சாய் ஸ்ரீஷா, பாலகிருஷ்ணன், வைஷ்ணவி, ஆகியோர் 2ம் பரிசு வென்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை வின்னர் அகாடமி தலைமை பயிற்சியாளர் ஷிஹான் ப. ராஜேஷ் கண்ணா பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

Tags :
|
|