Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • கொல்கத்தா அணி வீரர்களுக்கு அணியின் கேப்டன் மார்கன் புகழாரம்

கொல்கத்தா அணி வீரர்களுக்கு அணியின் கேப்டன் மார்கன் புகழாரம்

By: Karunakaran Mon, 02 Nov 2020 2:04:43 PM

கொல்கத்தா அணி வீரர்களுக்கு அணியின் கேப்டன் மார்கன் புகழாரம்

துபாயில் நடந்த ஐபிஎல் 54-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதில் முதலில் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்தது.

பின்னர், 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ராஜஸ்தான் அணி இறங்கியது. முதலில் இருந்தே கொல்கத்தா அணியின் பாட் கம்மின்ஸ் பந்து வீச்சில் மிரட்டினார். முன்னணி ஆட்டக்காரர்களை விரைவில் பெவிலியனுக்கு அனுப்பினார். ஜோஸ் பட்லர் ஓரளவு தாக்குப் பிடித்து 35 ரன்னில் அவுட்டானார். ராகுல் தெவாட்டியா 31 ரன்னில் வெளியேறினார். இறுதியில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்தது. இதனால் கொல்கத்தா அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

captain morgan,kolkata players,ipl 2020,rajastan royels ,கேப்டன் மோர்கன், கொல்கத்தா வீரர்கள், ஐபிஎல் 2020, ராஜஸ்தான் ராயல்ஸ்

ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி கடைசி ஆட்டத்தில் 60 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தி வெளியேற்றியது. புள்ளிப்பட்டியலில் 4வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்த வெற்றி மூலம் கொல்கத்தா அணி பிளேஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது. மும்பை-ஐதராபாத் அணிகள் மோதும் ஆட்டத்தின் முடிவை பொறுத்து ராஜஸ்தான் அணியின் தலைவிதி இருக்கிறது.

இந்நிலையில் நேற்று பெற்ற வெற்றியால் கொல்கத்தா வீரர்களை கேப்டன் மார்கன் பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர், 191 ரன் என்பது நல்ல ஸ்கோர் ஆகும். பேட்ஸ் மேன்கள், பந்து வீச்சாளர்கள் என அனைவரும் சிறப்பாக செயல்பட்டனர். இந்த ஆட்டத்தில் இதற்கு மேல் சிறப்பாக விளையாடி இருக்க வேண்டும் என்று கருதவில்லை. இனி என்ன நடப்பது என்பது கடவுள் கையில்தான் இருக்கிறது என்று கூறினார்.

Tags :