- வீடு›
- விளையாட்டு›
- மும்பை இந்தியன்ஸ் அணியின் வலைப்பயிற்சி பவுலராக சச்சின் மகன்
மும்பை இந்தியன்ஸ் அணியின் வலைப்பயிற்சி பவுலராக சச்சின் மகன்
By: Nagaraj Thu, 17 Sept 2020 9:06:50 PM
மும்பை இந்தியன்ஸ் அணியின் வலைப்பயிற்சி பவுலராக சச்சின் மகன் அர்ஜூன் தெண்டுல்கர் ஈடுபட்டு வருகிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்திய முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதற்காக, பல வருடங்களாக பயிற்சி செய்து வருகிறார். இவர் இடதுகை வேகப்பந்து வீச்சாளர், இவருடைய பந்து வீசும் வேகம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதமாக இருக்கும்.
இதற்காக சிறந்த பயிற்சியினை சச்சின் வழங்கி வருகிறார். இந்தியா மட்டுமின்றி
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்காவில் இவர் சிறப்பான பயிற்சி
எடுத்து வருகிறார். இவர் தற்போது ஐபிஎல் போட்டியில் பங்குபெறும் அணிகளில்
ஒன்றான மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களுக்கு வலைப் பயிற்சியின் பவுலராக
ஆகியுள்ளார் என்று செய்திகள் கசிந்துள்ளன.
அதாவது ஐபிஎல் போட்டியின்
முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் களம் காண உள்ள
நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களான டிரென்ட் போல்ட், சவுரப்
திவாரி, ஜேம்ஸ் பேட்டின்சன் ஆகியோருடன் சச்சின் மகன் அர்ஜூன் இடம்
பெற்றுள்ளார்.
அந்தப் புகைப்படம் குறித்த தகவல் இப்போது இடது கை
வேகப்பந்து வீச்சாளரான அர்ஜூன் தெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணியின்
வலைப்பயிற்சி பவுலராக பணியாற்றுவதாகக் கூறப்பட்டுள்ளது.