- வீடு›
- விளையாட்டு›
- இந்தியா - இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் ஒன்றை கொல்கத்தாவில் நடத்த பெங்கால் கிரிக்கெட் சங்கம் வேண்டுகோள்
இந்தியா - இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் ஒன்றை கொல்கத்தாவில் நடத்த பெங்கால் கிரிக்கெட் சங்கம் வேண்டுகோள்
By: Karunakaran Tue, 18 Aug 2020 5:39:29 PM
தென்ஆப்பிரிக்கா அணி மார்ச் மாதம் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. தரம்சாலாவில் நடைபெற இருந்த முதல் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. பின்னர், கொரோனா காரணமாக லக்னோ, கொல்கத்தாவில் நடைபெற இருந்த 2-வது மற்றும் 3-வது போட்டிகள் கைவிடப்பட்டன.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாநில கிரிக்கெட் சங்கங்கள் நிதி ஆதாரத்தை இழந்துள்ளது. தென்ஆப்பிரிக்கா- இந்தியா இடையிலான போட்டி ரத்து செய்யபட்டதால் உத்தர பிரதேச கிரிக்கெட் சங்கமும், பெங்கால் கிரிக்கெட் சங்கத்திற்கும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
அடுத்த வருடம் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்நிலையில் உத்தர பிரதேச கிரிக்கெட் சங்கமும், பெங்கால் கிரிக்கெட் சங்கத்திற்கும் ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுசெய்யும் வகையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியை கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதன் கிடைக்கும் வருமானம் மூலம் இரண்டு சங்கங்களும் ஈடுசெய்து கொள்ள முடியும் என பிசிசிஐ-க்கு பெங்கால் கிரிக்கெட் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து பிசிசிஐ ஆலோசித்து முடிவை வெளியிடும்.