Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • இந்தியா – ஆஸ்திரேலியா போட்டிக்கு விடுக்கப்பட்ட மிரட்டலால் பரபரப்பு

இந்தியா – ஆஸ்திரேலியா போட்டிக்கு விடுக்கப்பட்ட மிரட்டலால் பரபரப்பு

By: Nagaraj Sun, 12 Mar 2023 9:52:20 PM

இந்தியா – ஆஸ்திரேலியா போட்டிக்கு விடுக்கப்பட்ட மிரட்டலால் பரபரப்பு

அகமதாபாத்: இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்து வருகிறது. கடந்த 9ம் தேதி பிரதமர் மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் இருவரும் ஒன்றாக அமர்ந்து போட்டியை நேரலையில் பார்த்தனர்.

இந்த நிலையில் போட்டிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதுபற்றி குஜராத் குற்ற பிரிவு டி.சி.பி. சைதன்யா மந்திலிக் இன்று கூறும்போது, இரு நாட்டு பிரதமர்களும் போட்டியை காணும்போது, சிம் பாக்ஸ் தொழில் நுட்பம் உதவியுடன் மிரட்டல் விடப்பட்டு உள்ளது.

அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது குறித்து அகமதாபாத் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ரேவா மற்றும் சத்னா பகுதியை சேர்ந்த குழுவினர் என கண்டறியப்பட்டனர். எனினும், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், பீகார் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பல்வேறு இடங்களில் இருந்தும் மிரட்டல் விடப்பட்ட இடங்கள் என அறிய பெற்றது.

பாகிஸ்தானில் இருந்து பல்வேறு போலி டுவிட்டர் கணக்குகள் மூலமும் அச்சுறுத்தல்கள் விடப்பட்டன. இறுதியாக, மத்திய பிரதேசத்தில் உள்ள சத்னா மற்றும் ரேவா நகரங்களில் இருந்து சட்டவிரோத செய்தி பரிமாற்றங்கள் கண்டறியப்பட்டு உள்ளன என்று அவர் கூறினார்.

இதில், மத்திய பிரதேசத்தில் உள்ள நீதிக்காக சீக்கியர்கள் எனப்படும் எஸ்.எப்.ஜே. என்ற காலிஸ்தான் ஆதரவு குழுவினர் இந்த மிரட்டலுடன் தொடரபுடையவர்கள் என போலீசாரால் சந்தேகிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து, அந்த அமைப்பை சேர்ந்த 2 பேரை குஜராத் போலீசின் குற்ற பிரிவினர் இன்று கைது செய்து உள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

australia,india,intimidation,khalistan,test match, ,ஆஸ்திரேலியா, இந்தியா, காலிஸ்தான், டெஸ்ட் போட்டி, மிரட்டல்

Tags :
|