Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஐபிஎல் கிரிக்கெட் போட்டி திருவிழா போன்று இருந்தது - நினைவு கூர்ந்த உமல் குல்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி திருவிழா போன்று இருந்தது - நினைவு கூர்ந்த உமல் குல்

By: Karunakaran Sun, 28 June 2020 3:43:39 PM

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி திருவிழா போன்று இருந்தது - நினைவு கூர்ந்த உமல் குல்

2008-ம் ஆண்டு ஐபிஎல் டி20 லீக் முதன் முதலாக தொடங்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் வாரியம் தொடங்கிய இந்த ஐபிஎல் டி20 லீக் தொடரில் பாகிஸ்தான் அணி வீரர்களும் கலந்து கொண்டனர். 2007-ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சளார் உமர் குல்லை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்திருந்தது.

தற்போது 2008 தொடரை நினைவு கூர்ந்த உமல் குல், முதல் முறையாக தனியார் லீக் தொடங்கப்பட்டதால் நாங்கள் மிகவும் ரசித்தோம். 2007-ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பையில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்தியது. ஐபிஎல் ஏலம் எடுக்கப்பட்டது. வங்காள தேசத்திற்கு எதிராக சொந்த மண்ணில் விளையாடியது, பிரெண்டன் மெக்கல்லம் முதல் போட்டியிலேயே 150 ரன்கள் விளாசியது என பல ஞாபங்கள் உள்ளதாக அவர் கூறினார்.

umal gul,ipl cricket,pakistan cricketer,indian cricket board ,உமல் குல், ஐபிஎல் கிரிக்கெட், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர், இந்திய கிரிக்கெட் வாரியம்

மேலும் அவர், நாங்கள் இந்தியாவுக்கு சென்றபோது, பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்தியாவில் அதிகமான ரசிகர்கள் இருந்தனர். ஐபிஎல் முற்றிலும் மாறுவிட்ட விஷயம். அது திருவிழா போன்று இருந்தது. போட்டி நடைபெற்ற பின், ஓட்லில் போட்டி குறித்த நிகழ்ச்சி நடைபெறும். குறிப்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஷாருக் கான் உரிமையாளர் என்பதால் அவர் இருப்பார் என்று கூறினார்.

தோல்வியடைந்தாலும், வெற்றி பெற்றாலும் ஸ்பான்சர், பிராண்ட் உடன் போட்டோ எடுத்துக் கொள்வோம். பார்ட்டியும் நடைபெறும். இது மிகவும் சிறப்பாக அனுபவம். நான் இளம் வீரர் என்பதால் ரிக்கி பாண்டிங் போன்ற தலைசிறந்த வீரர்களிடம் இருந்து ஏராளமான விஷயங்கள் கற்றுக்கொண்டேன் என உமல் குல்நினைவு கூர்ந்தார். 2008-க்குப்பின் எல்லைப் பிரச்சினை காரணமாக பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :