Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • இங்கிலாந்து மண்ணில் விளையாடுவது போன்ற பேலன்ஸ் கொண்ட அணியாக பாகிஸ்தான் அணி உள்ளது - அசார் அலி

இங்கிலாந்து மண்ணில் விளையாடுவது போன்ற பேலன்ஸ் கொண்ட அணியாக பாகிஸ்தான் அணி உள்ளது - அசார் அலி

By: Karunakaran Fri, 31 July 2020 5:01:51 PM

இங்கிலாந்து மண்ணில் விளையாடுவது போன்ற பேலன்ஸ் கொண்ட அணியாக பாகிஸ்தான் அணி உள்ளது - அசார் அலி

இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. கொரோனா வைரஸ் பரவலுக்கு பின், பாகிஸ்தான் விளையாடும் முதல் டெஸ்ட் தொடர் இதுவே ஆகும். ஆகஸ்ட் ஐந்தாம் தேதி முதல் டெஸ்ட் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்தை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக பாகிஸ்தான் அணி கேப்டன் அசார் அலி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ஷாஹீன் ஷா மற்றும் நசீம் ஆகியோர் சமீபத்தில் நடைபெற்ற தொடரில் பந்து வீசிய வகையில் அவர்களை இருவரையும் அணியில் பெற்றிருப்பது அதிர்ஷ்டம். நாங்கள் இங்கிலாந்து மண்ணிற்கு ஏற்றபடி அனுபம் பெற்றுள்ள முகமது அப்பாஸை பெற்றுள்ளது சிறப்பானது என்று தெரிவித்துள்ளார்.

azhar ali,pakistan team,english soil,cricketer ,அசார் அலி, பாகிஸ்தான் அணி, ஆங்கில மண், கிரிக்கெட் வீரர்

எங்களுடைய பந்து வீச்சாளர்கள் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துவார்கள். யாசீர் ஷாவின் அனுபவத்தை பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவர் லெக்-ஸ்பின்னர். இளம் வீரர்களை வழிநடத்துவது முக்கியமானது. எங்களுடைய வீரர்கள் நல்ல டச்சில் உள்ளனர். பேலன்ஸ் கொண்ட அணி எப்போதும் சிறப்பானதாக இருக்கும் என்று அசார் அலி கூறியுள்ளார்.

மேலும் அவர், பாகிஸ்தான் ஏற்கனவே இங்கிலாந்தில் சிறப்பாக விளையாடி உள்ளது. லாக்டவுன் காரணமாக வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. அது ஒரு சவாலான அனுபவம். முகாமில் முதலில் பந்து வீச்சாளர்களுக்கு சற்று கடினமாக இருந்தது. மெதுவாக பந்து வீசினார். அதன்பின் பயிற்சி மூலம் பழைய நிலையை அடைந்தனர். வேகப்பந்து வீச்சாளர்களின் வொர்க்லோடு சிறப்பாகவே உள்ளதாக கூறியுள்ளார்.

Tags :