- வீடு›
- விளையாட்டு›
- இந்திய அணி முன்னாள் கேப்டன் போட்ட ட்வீட்... ரசிகர்கள் மத்தியில் வைரல்
இந்திய அணி முன்னாள் கேப்டன் போட்ட ட்வீட்... ரசிகர்கள் மத்தியில் வைரல்
By: Nagaraj Wed, 14 Sept 2022 11:07:19 AM
புதுடில்லி: இவங்க ரெண்டு பேரும் இல்லாதது ஷாக்கா இருக்கு. முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் ட்வீட் செய்துள்ளார். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
டி 20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி சில நாட்களுக்கு முன்னர் பிசிசிஐயால் அறிவிக்கப்பட்டது. இந்திய அணி சமீபத்தில் ஆசியக் கோப்பை தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது. ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணி பல பரிசோதனைகளை மேற்கொண்டதால்தான் இந்த தோல்வி என்று விமர்சனங்கள் எழுந்தன.
இதையடுத்து தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளோடு டி 20 தொடரில் விளையாடுகிறது. உலகக்கோப்பைக்கு முன்னர் இந்திய அணி விளையாடும் தொடர்கள் இவை இரண்டும்தான். இந்நிலையில் டி 20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் காயத்தில் இருந்து மீண்ட பூம்ரா மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் அணியில் இணைந்துள்ளனர். மற்றபடி ஆசியக் கோப்பையில் விளையாடிய வீரர்களே இடம்பெற்றுள்ளனர்.
ரோகித் ஷர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி,
சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ்
கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின்,
சாஹல், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல்,
அர்ஷ்தீப் சிங்.
இந்நிலையில் இந்த அணியில்
ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் முகமது ஷமி ஆகியோர் இடம்பெறாதது அதிர்ச்சியளிப்பதாக
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் கருத்து
தெரிவித்துள்ளார். தீபக் ஹூடாவுக்கு பதில் ஸ்ரேயாஸ் ஐயரும், ஹர்ஷல்
படேலுக்கு பதிலாக முகமது ஷமியும் என்னுடைய தேர்வு என அவர் கூறியுள்ளார்.