Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஆஸ்திரேலியா மண்ணில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடுவதை விட மிகப்பெரிய வாய்ப்பு ஏதுமில்லை - ஷுப்மான் கில்

ஆஸ்திரேலியா மண்ணில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடுவதை விட மிகப்பெரிய வாய்ப்பு ஏதுமில்லை - ஷுப்மான் கில்

By: Karunakaran Mon, 14 Dec 2020 5:03:54 PM

ஆஸ்திரேலியா மண்ணில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடுவதை விட மிகப்பெரிய வாய்ப்பு ஏதுமில்லை - ஷுப்மான் கில்


இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் வியாழக்கிழமை தொடங்குகிறது. இந்த போட்டியில் ஷுப்மான் கில் அல்லது பிரித்வி ஷா ஆகியோரில் ஒருவர் தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்புள்ளது. முதல் பயிற்சி ஆட்டத்தில் சரியாக விளையாடவில்லை என்றாலும், 2-வது பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஷுப்மான் கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

ஆஸ்திரேலியா மண்ணில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடுவதை விட மிகப்பெரிய வாய்ப்பு ஏதுமில்லை என ஷுப்மான் கில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஷுப்மான் கில் கூறுகையில் ‘வங்காளதேசத்திற்கு எதிராக ஒரு போட்டியில் விளையாடுவதற்காக பிங்க்-பாலில் பயிற்சி மேற்கொண்டோம். அதன்பின் 2-வது பயிற்சி ஆட்டத்திற்கு (ஆஸ்திரேலியா ஏ) முன்பு வரை போட்டி களத்தில் பிங்க்-பாலை எதிர்கொள்ளவில்லை என்று தெரிவித்தார்.

greater opportunity,australian soil,australia,shubman gill ,அதிக வாய்ப்பு, ஆஸ்திரேலிய மண், ஆஸ்திரேலியா,ஷுப்மான் கில்

மேலும் அவர், ஆஸ்திரேலியாவை எதிர்த்து ஆஸ்திரேலியாவில் எதிர்கொள்வது மிகவும் அச்சுறுத்தலானது. ஆனால், நான் உண்மையிலேயே போட்டியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆஸ்திரேலியா மண்ணில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடுவதை விட சிறந்த வாய்ப்பு ஏதுமில்லை. ஆஸ்திரேலியா மண்ணில் ரன்கள் குவித்தால், தன்னம்பிக்கைக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கும் என்றார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் விராட் கோலி இருப்பார். அதன்பின் அவர் நாடு திரும்புகிறார். இது இந்திய அணி பாதகத்தை ஏற்படுத்தும். இருப்பினும் இதனால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :