Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • புதிய சாம்பியனை வெளிக்கொண்டு வருவதற்கு இது ஒரு வாய்ப்பு; ரவிசாஸ்திரி தகவல்

புதிய சாம்பியனை வெளிக்கொண்டு வருவதற்கு இது ஒரு வாய்ப்பு; ரவிசாஸ்திரி தகவல்

By: Nagaraj Sat, 08 Oct 2022 7:32:36 PM

புதிய சாம்பியனை வெளிக்கொண்டு வருவதற்கு இது ஒரு வாய்ப்பு; ரவிசாஸ்திரி தகவல்

மும்பை: புதிய சாம்பியனை கொண்டு வர ஒரு வாய்ப்பு... டி20 உலக கோப்பையில் பும்ரா மற்றும் ஜடேஜா இல்லாதது அணிக்கு ஒரு புதிய சாம்பியனை வெளிக்கொண்டு வருவதற்கு ஒரு வாய்ப்பு என இந்திய அணி முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.


ஆஸ்திரேலியாவில் வரும் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13 ஆம் தேதி வரை டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உட்பட 16 அணிகள் பங்கேற்கிறது, இதில் இந்திய அணி நேரடியாக சூப்பர் 12 சுற்றில் கால் பதித்துள்ள நிலையில், தன்னுடைய முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 23ஆம் தேதி மெல்போர்னில் எதிர்கொள்கிறது.

இந்த உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி மும்பையிலிருந்து விமானம் மூலம் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு சென்றது. இதற்கிடையே டி20 உலக கோப்பை தொடரிலிருந்து ஜஸ்பிரிட் பும்ரா மற்றும் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் காயம் காரணமாக இந்திய அணியிலிருந்து விலகி உள்ளனர்.

new champion,exit,opportunity,former coach,indian team ,புதிய சாம்பியன், விலகல், வாய்ப்பு, முன்னாள் பயிற்சியாளர், இந்திய அணி

இந்த நிலையில் டி20 உலக கோப்பையில் இந்திய அணியில் பும்ரா மற்றும் ஜடேஜா இல்லாதது அணிக்கு பின்னடைவாக இருந்தாலும் ஒரு புதிய சாம்பியனை வெளிக்கொண்டு வருவதற்கு இது ஒரு வாய்ப்பு என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறியதாவது, பும்ரா காயம் அடைந்திருப்பது துரதிஷ்டவசமானது. தற்போது கிரிக்கெட் போட்டிகள் நிறைய விளையாடப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக காயம் ஏற்படுகின்றது.


பும்ராவும் காயம் அடைந்துள்ளார். இது மற்ற வீரர்களுக்கு அணியில் கிடைத்திருக்கும் ஒரு வாய்ப்பு. இது ஒரு புதிய சாம்பியனை வெளிக்கொண்டு வருவதற்கு உதவும். நம்மிடம் தரமான, பலமான அணி இருக்கிறது என்று கூறினார்..

Tags :
|