Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • சென்னையில் வரும் மே 14 -ம் தேதி நடைபெற உள்ள போட்டிக்கு டிக்கெட் விற்பனை நாளை துவக்கம்

சென்னையில் வரும் மே 14 -ம் தேதி நடைபெற உள்ள போட்டிக்கு டிக்கெட் விற்பனை நாளை துவக்கம்

By: vaithegi Thu, 11 May 2023 10:33:52 AM

சென்னையில் வரும் மே 14 -ம் தேதி நடைபெற உள்ள போட்டிக்கு டிக்கெட் விற்பனை நாளை துவக்கம்

இந்த வருட ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடர் மார்ச் இறுதியில் துவங்கி 10 அணிகளும் தங்கள் முக்கால்வாசி போட்டிகளை நிறைவு செய்துள்ளன. தற்போது நடைபெறும் போட்டிகள் அந்தந்த அணிகளின் தகுதிச்சுற்று (பிளே ஆஃப்) வாய்ப்புக்கு வழிவகுக்கும் என்பதால் போட்டிகள் மிக கடுமையாக சென்று கொண்டு இருக்கின்றன.

சென்னை அணியானது வருகிற மே 14ஆம் தேதி ஞாயிற்று கிழமை இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா அணியுடன் மோத உள்ளது. இதனை அடுத்து மே 14ஆம் தேதிக்கான போட்டியின் டிக்கெட் விற்பனை நாளை துவங்க உள்ளது என சென்னை அணி நிர்வாகம் அறிவித்து உள்ளது.

tickets,ipl ,டிக்கெட் ,ஐபிஎல்

எனவே இதற்கு முன் நடத்தபட்ட போட்டிகளில் பெண்களுக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு தனிவரிசை இல்லை என பல புகார்கள் எழுந்த நிலையில் அதற்கான தீர்வு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதனை அடுத்து அதன்படி, வருகிற 12-ம் தேதி நேரடி டிக்கெட் விற்பனையின் பொது, 2 ஆயிரம் டிக்கெட்கள் பெண்களுக்கு என தனி வரிசையிலும், மாற்று திறனாளிகளுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கை டிக்கெட்டுகள் தனி வரிசையிலும் விற்பனை செய்யப்பட உள்ளன என்று சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த டிக்கெட் விற்பனையானது நாளை காலை 9.30 மணிக்கு துவங்கப்பட உள்ளது.

Tags :