Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2022-ம் ஆண்டு வரை டோனி விளையாடுவார் - காசிவிஸ்வநாதன் அறிவிப்பு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2022-ம் ஆண்டு வரை டோனி விளையாடுவார் - காசிவிஸ்வநாதன் அறிவிப்பு

By: Karunakaran Thu, 13 Aug 2020 12:25:05 PM

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2022-ம் ஆண்டு வரை டோனி விளையாடுவார் - காசிவிஸ்வநாதன் அறிவிப்பு

2008-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி முதன் முதலாக தொடங்கப்பட்டது. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடங்கியது முதலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக டோனி இருந்து வருகிறார். அனைத்து சீசன்களிலும் அணியை ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு அழைத்து சென்ற பெருமை அவருக்கு உள்ளது. இந்நிலையில் 13-வது ஐ.பி.எல். போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் 19-ந்தேதி தொடங்கவுள்ளது.

39 வயதான டோனி 13-வது ஐ.பி.எல். போட்டிக்கு தயாராகி வருகிறார். இந்நிலையில் டோனி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசிவிஸ்வநாதன் பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர், இந்த ஆண்டு மட்டுமின்றி அடுத்த ஆண்டிலும் டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அங்கம் வகிப்பார் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

tony,chennai super kings,2022 year,kasiviswanathan ,டோனி, சென்னை சூப்பர் கிங்ஸ், 2022 ஆண்டு, காசிவிஸ்வநாதன்

காசிவிஸ்வநாதன் பேட்டி அளித்தபோது, அனேகமாக 2022-ம் ஆண்டு கூட அவர் சென்னை அணிக்காக விளையாடுவார். டோனி தனது சொந்த ஊரான ராஞ்சியில் உள்விளையாட்டு அரங்கில் பயிற்சி மேற்கொண்டார் என்பதை ஊடகம் மூலமே அறிகிறேன். ஆனால் டோனி குறித்து எங்களுக்கு எந்த கவலையும் இல்லை என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், தனது பொறுப்பு என்ன? தன்னையும், அணியையும் எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது டோனிக்கு நன்கு தெரியும் என்று கூறினார். இதே போன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூத்த வீரர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஷேன் வாட்சன் பேட்டி அளித்தபோது, டோனி இன்னும் விளையாடுவதை விரும்புகிறார். அவர் எப்போதுமே மதிப்புமிக்க வீரர் தான். அவரது திறமையையும், வெளிப்படுத்தும் கடின முயற்சியையும் பார்க்கும் போது அவரால் 40 வயதை கடந்தும் விளையாட முடியும் என்று கூறினார்.

Tags :
|