Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • தென்ஆப்ரிக்கா தொடரில் முதல் போட்டியிலேயே உம்ரன்மாலிக்கிற்கு வாய்ப்பில்லையாம்

தென்ஆப்ரிக்கா தொடரில் முதல் போட்டியிலேயே உம்ரன்மாலிக்கிற்கு வாய்ப்பில்லையாம்

By: Nagaraj Wed, 08 June 2022 10:55:49 AM

தென்ஆப்ரிக்கா தொடரில் முதல் போட்டியிலேயே உம்ரன்மாலிக்கிற்கு வாய்ப்பில்லையாம்

புதுடில்லி: முதல் போட்டியிலேயே வாய்ப்பு இல்லையாமே... இந்தியா தென் ஆப்ரிக்கா இடையேயான கிரிக்கெட் தொடரில் அதிக எதிர்பார்க்கப்படும் இந்திய வீரர்களின் முதன்மையானவரான உம்ரன் மாலிக்கிற்கு முதல் போட்டியிலேயே இடம் கிடைக்க வாய்ப்பு இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டி.20 தொடரின் முதல் போட்டி 9ம் தேதி துவங்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ராஹ் போன்ற சீனியர் வீரர்கள் பலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

umran malik,arsteep singh,preferably,bowlers,location ,
உம்ரன் மாலிக், அர்ஸ்தீப் சிங், முன்னுரிமை, பந்து வீச்சாளர்கள், இடம்

இதனால் உம்ரன் மாலிக், அர்ஸ்தீப் சிங் போன்ற இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியை கே.எல் ராகுல் வழிநடத்த உள்ளார். சமீபகாலமாக தொடர்ந்து மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் டேவிட் மில்லர், டெம்பா பவுமா போன்ற சீனியர் வீரர்கள் பலரை உள்ளடக்கிய தென் ஆப்ரிக்கா அணியை, இளம் வீரர்கள் பலரை கொண்ட இந்திய அணியால் சமளிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதனால், இந்த தொடர் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்தியா தென் ஆப்ரிக்கா இடையேயான கிரிக்கெட் தொடர் குறித்து பேசும் பெரும்பாலான முன்னாள் வீரர்கள், இந்திய அணியில் கண்டிப்பாக உம்ரன் மாலிக்கிற்கு இடம் கொடுக்க வேண்டும் என்றே கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இதற்கிடையில் முதல் போட்டியிலேயே உம்ரன் மாலிக்கிற்கு இடம் கிடைக்க வாய்ப்பு இல்லை என தெரியவந்துள்ளது. ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, 'பயிற்சியில் உம்ரன் மாலிக் மிக சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார்,

ஆனால் அவரை விட அர்ஸ்தீப் சிங் மிக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். யார்கர், வேகம் என அனைத்திலும் அர்ஸ்தீப் சிங் மிக சிறப்பாக செயல்பட்டு வருவது இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாகிகளை பெரிதாக கவர்ந்துள்ளது.
எனவே முதல் டி.20 போட்டியில் உம்ரன் மாலிக்கை விட அர்ஸ்தீப் சிங்கிற்கே முன்னுரிமை கொடுக்கப்படும்' என தெரியவந்துள்ளது. அதே போல் புவனேஷ்வர் குமார், ஹர்சல் பட்டேல் மற்றும் ஆவேஸ் கான் ஆகியோருக்கும் பந்துவீச்சாளர்கள் வரிசையில் இடம் கிடைக்கும் என தெரிகிறது.

Tags :